Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கேரளாவில் பிரசித்தி பெற்ற பம்பா நதியில் நாளை பாம்பு படகு போட்டி

July 12, 2022
in News, World, இந்தியா, முக்கிய செய்திகள்
0
கேரளாவில் பிரசித்தி பெற்ற பம்பா நதியில் நாளை பாம்பு படகு போட்டி
  • கொரோனா பிரச்சினையால் படகு போட்டி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை.
  • தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் ராஜ பிரமுகன் கோப்பைக்கான படகு போட்டி நடத்தப்படுகிறது.

திருவனந்தபுரம்:

கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவில் ஏராளமான ஆறுகள், நதிகள் உள்ளன.

இந்த நதிகளில் ஆண்டுதோறும் படகு போட்டி நடைபெறும். இதில் ராஜ பிரமுகன் கோப்பைக்கான படகு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த போட்டியில் சுண்டன் படகு எனப்படும் பாம்பு படகுகள் பங்கேற்கும். ஒவ்வொரு படகிலும் வீரர்கள் துடுப்புகளுடன் அமர்ந்து இருப்பார்கள். அவர்கள் வஞ்சிப்பாட்டு மற்றும் தாள கருவிகளை இசைத்தபடி போட்டியில் பங்கேற்பார்கள். இந்த போட்டியை காண வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

கொரோனா பிரச்சினையால் இந்த படகு போட்டி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் ராஜ பிரமுகன் கோப்பைக்கான படகு போட்டி நடத்தப்படுகிறது.

சம்பகுளம் பம்பை நதியில் நடைபெறும் இந்த போட்டியில் 9 படகுகள் பங்கேற்கின்றன. நாளை மதியம் 2.10 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை கேரள வேளாண்துறை மந்திரி பிரசாத் தொடங்கி வைக்கிறார். கம்யூனிஸ்டு, காங்கிரஸ் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்களும் இதில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த படகு போட்டியை போன்று நடைபெறும் இன்னொரு பிரசித்தி பெற்ற படகு போட்டி நேரு கோப்பை படகு போட்டியாகும்.

இந்த போட்டி செப்டம்பர் மாதம் 4-ந் தேதி நடக்க உள்ளது.

Previous Post

சர்வதேச சமுதாயம் இலங்கைக்கு உதவ வேண்டும் : சோனியா காந்தி

Next Post

ஜனாதிபதி 13 ஆம் திகதி பதவி விலகினால் 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதி தெரிவு – பிரசன்ன ரணதுங்க 

Next Post
வர்த்தகரிடம் பணம் பறிக்க முயன்ற அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு 2 வருட கடூழியச் சிறை

ஜனாதிபதி 13 ஆம் திகதி பதவி விலகினால் 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதி தெரிவு - பிரசன்ன ரணதுங்க 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures