கடந்த பிப்ரவரி மாதம் துபாய் சென்றிருந்தபோது எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார் நடிகை ஸ்ரீதேவி. அதையடுத்து அவர் நடித்த மாம் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அந்த விருதினை அவரது கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி மற்றும் குஷி பெற்றுக்கொண்டார்.
ஸ்ரீதேவி உயிரோடு இருந்தபோது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வார். தற்போது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் வருகிற மே 16ம் தேதி ஸ்ரீதேவியின் நினைவுகளை போற்றும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில், ஸ்ரீதேவியை பற்றி உலக சினிமா பிரமுகர்கள் பலரும் தங்களது நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். இதற்கான போனி கபூர், ஜான்வி மற்றும் குஷி ஆகியோர் கேன்ஸ் செல்ல உள்ளனர்.