அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிரணி செப்டம்பர் 5 ஆம் திகதி கொழும்பில் நடாத்த எதிர்பார்த்துள்ள கூட்டம் எங்கு நடைபெறும் என்பது முன்னதாக அறிவிக்கப்பட மாட்டாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கூட்டு எதிர்க் கட்சியின் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
கூட்டம் நடைபெறும் இடத்தை முன்னதாக அறிவித்தால், அரசாங்கம் பொலிஸாரை வைத்து கூட்டம் நடாத்துவதற்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவைப் பெற்றுக் கொள்ளும் எனவும் இதனால், முன்னதாக நடைபெறும் இடத்தை சொல்லாமல் இருப்போம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

