நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பை வகிக்கும் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பினர் அரசமைக்க ஆதரவளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியாயின் அவர்கள் எதிர்க்கட்சிப் பொறுப்புக்களில் இருந்து நீங்கிக்கொள்ளவேண்டும் என்று வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணி நேற்றுக் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைமைப் பொறுப்பை வகிக்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரளிப்பதாக அரச தலைவருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
உலகில் எந்த நாட்டிலும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிப் பொறுப்பை வகிக்கும் கட்சி அரசமைக்க ஆதரவளிப்பதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களிலும் எதிர்க்கட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சியின் தீர்மானங் களை ஆதரித்தே வந்துள்ளது – என்றார்.

