Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

குறும்பட நடிகை ஆன ரித்திகா சிங்

March 8, 2018
in Cinema
0

இறுதிசுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த நிஜ குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங். அதன்பிறகு ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா படங்களில் நடித்தார். தற்போது வணங்காமுடி என்ற படத்தில் நடித்து வருகிறார். எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தற்போது குறும்படம் ஒன்றில் நடித்திருக்கிறார் ரித்திகா.

பாலிவுட் கலைஞர்கள் இணைந்து உருவாக்கி உள்ள இந்த குறும்படத்தின் பெயர் ஐ யம் சாரி. இது பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பாலியல் ரீதியான பிரச்னைகளை பற்றி பேசும் மியூசிக்கல் குறும்படம். இதனை தேசிய விருது பெற்ற அஸ்வின் சதுர்த்தி இயக்கி இருக்கிறார்.

“இது பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பாலியல் தொடர்பான பிரச்சினைகளை பேசுகிற படம். பெண்களின் பாதுகாப்பை அரசு இன்னும் பலப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிற படம்” என்கிறார் தயாரிப்பாளர் சாஜித் குர்ஷித்.

“நானும் ஒரு பெண் என்பதால் பெண்கள் குறித்த இந்த விழிப்புணர்வு படத்தில் ஆர்வமுடன் நடித்தேன். பெண்கள் தற்காப்பு கலை பயில வேண்டும் என்பதை ஒவ்வொரு தருணத்திலும் நான் கூறி வருகிறேன். அதை பலமாக சொல்ல இந்தப் படம் உதவியது. விரைவில் ஹிந்திப் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறேன். அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வரும்” என்கிறார் ரித்திகா சிங்.

Previous Post

ஐ.பி.எல் தொடருக்காக டெஸ்ட் போட்டிகள் புறக்கணிக்கப்படுகின்றனவா?

Next Post

மீண்டும் மேயாத மான்

Next Post

மீண்டும் மேயாத மான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures