Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காலநிலையில் திடீர் மாற்றம் | மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

January 29, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
காலநிலையில் திடீர் மாற்றம் | மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாளை (30) முதல் நாடு முழுவதும் மழை அதிகரிக்கும் சாத்தியம் அதிகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை மறுதினம் (31) மற்றும் பெப்ரவரி முதலாம் ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பல இடங்களில் சுமார் 150 மில்லிமீட்டர் வரையான கடும் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

பிற்பகல் அல்லது இரவு வேளையில் நாட்டின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இதற்கமைய சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இதேவேளை வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யும் என எதிர்வு கூறியுள்ளது.

மேலும் இடியுடன் கூடிய மழை காரணமாக தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் நேற்றிரவு அறிவித்தது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் எதிர்வரும் 31ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, பெப்ரவரி முதலாம் திகதி நாட்டின் கிழக்கு கடற்கரையை நெருங்கும் என வானிலை அதிகாரிகள் கணித்துள்ளனர்.

இதன்காரணமாக குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Previous Post

ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் கழகம் சவூதி ‘சுப்பர் கப்’ போட்டிகளிலிருந்து வெளியேற்றம்

Next Post

நாட்டினுடைய சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள் | எம்.ஏ.சுமந்திரன்

Next Post
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்த நாமலின் கருத்துக்கு கூட்டமைப்பு வரவேற்பு!

நாட்டினுடைய சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள் | எம்.ஏ.சுமந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures