Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணத்தை தரிசித்த பக்தர்கள்

June 23, 2021
in News, Sports
0

மாங்கனித் திருவிழாவின் 3-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக, இன்று (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகள் மகா அபிஷேகம் நடக்கிறது.

காரைக்கால் பாரதியார் வீதியில், இறைவனின் திருவாயால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட பெருமைக்குரிய காரைக்கால் அம்மையார் கோவில் உள்ளது.

இங்கு காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூரும் வகையில், ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக, மாங்கனித் திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது.

இந்த ஆண்டும் கொரோனா தொற்று இருப்பதால், கடந்த ஆண்டைப் போலவே, பக்தர்கள் இன்றி கோவிலுக்குள்ளேயே விழாக்கள் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி மற்றும் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, விழாவில், சமூக இடைவெளி, முககவசம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் நெறிமுறைகளின்படி பக்தர்களை அனுமதிக்க, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. இரவு 7 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது.

விழாவின் 2-ம் நாளான நேற்று முக்கிய நிகழ்ச்சியாக கைலாசநாதர் கோவிலில் காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்ததும் சமூக இடைவெளி, முககவசம் மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில், குறைந்த அளவிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, மாங்கனித் திருவிழாவின் 3-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக, இன்று (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகள் மகா அபிஷேகமும், நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு பிச்சாண்டவர் வீதியுலா மற்றும் மாங்கனி இறைப்பது, பிற்பகல் 12.30 மணிக்கு அமுது படையல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 25-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடக்கிறது.

http://Facebook page / easy 24 news

Previous Post

உலக ஒலிம்பிக் தினம் இன்று!

Next Post

மட்டக்களப்பு கொக்குவில் வீதி செப்பனிடும் பணிகள் ஆரம்பம்

Next Post
மட்டக்களப்பு கொக்குவில் வீதி செப்பனிடும் பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பு கொக்குவில் வீதி செப்பனிடும் பணிகள் ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures