Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

காபூல் விமான நிலைய குழப்பத்திற்கு அமெரிக்காவே காரணம்… தலிபான் குற்றச்சாட்டு

August 22, 2021
in News, World
0
காபூல் விமான நிலைய குழப்பத்திற்கு அமெரிக்காவே காரணம்… தலிபான் குற்றச்சாட்டு

நிலைமை மோசமாக உள்ளதால் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கர்கள் யாரும் காபூல் விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். காபூலில் உள்ள விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு விமானங்கள் மீட்பு பணியில் ஈடுபடுவதால் அந்த விமான நிலையத்தில் வெளிநாட்டவர்கள் மட்டுமின்றி ஆப்கானிஸ்தான் மக்களும் குவிந்துள்ளனர். இதனால் விமான நிலையத்தை சுற்றிலும் அமெரிக்க படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த மக்கள் பலர், மொத்தமாக விமான நிலையத்திற்குள் நுழைய முயற்சித்தனர். அப்போது, அந்த கூட்டத்தில் திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கூட்டத்தின் முன்வரிசையில் நின்றுகொண்டிருந்தவர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். ஆனால், 7 பேர் இறந்ததாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது.

நிலைமை மோசமாக உள்ளதால் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கர்கள் யாரும் காபூல் விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பமான நிலைக்கு அமெரிக்காவே காரணம் என தலிபான் அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது.

‘விமான நிலையத்தில் மக்களை ஒழுங்குபடுத்த அமெரிக்கா தவறிவிட்டது. நாடு முழுவதும் அமைதியாக உள்ளது, ஆனால் காபூல் விமான நிலையத்தில் மட்டும் குழப்பம் நிலவுகிறது’ என தலிபான் அதிகாரி அமீர் கான் முதாகி தெரிவித்துள்ளார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

நடிகையாக அறிமுகமாகும் ஷாருக்கான் மகள்

Next Post

பின்லேடனின் கடைசி நிமிடங்கள்- மனைவி வெளியிட்ட புதிய தகவல்

Next Post
பின்லேடனின் கடைசி நிமிடங்கள்- மனைவி வெளியிட்ட புதிய தகவல்

பின்லேடனின் கடைசி நிமிடங்கள்- மனைவி வெளியிட்ட புதிய தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures