Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

காத்தான்குடியில் துப்பாக்கிச் சூடு! பயன்படுத்தப்பட்டது ஜோசப் பரராஜசிங்கத்தை சுட்ட துப்பாக்கியா?

June 15, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மிதிகம துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகொலை | கொலையாளி தலைமறைவு

மட்டக்களப்பு, காத்தான்குடியில் சற்று முன்னர் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் உள்ள வீடொன்றிலேயே துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும், பெண் ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வீட்டினுள் புகுந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படும் நபரை, சீ.சீ.ரி.வி கமெராவினால் அடையாளம் கண்டுள்ளார்கள் பொதுமக்கள்.

காத்தான்குடியைச் சேர்ந்த ஷகீட் என்பவரே தாக்குதலை மேற்கொண்டதாக அங்குள்ள மக்கள் அடையாளம் கண்டுள்ளதாக எமது காத்தான்குடி செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்த ஷகீட் முன்னர் மத அடிப்படைவாத தீவிரவாதக் குழு ஒன்றில் அங்கம்வகித்ததாகவும், ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் படுகொலைக் குற்றவாளியும், ரீ.எம்.வி.பி. உறுப்பினருமான சாந்தன் என்பவரை காத்தான்குடியில் வைத்து படுகொலைசெய்ததும் இந்த ஷகிட்தான் என்றும் கூறப்படுகின்றது.

மட்டக்களப்பில்(Batticaloa) இடம்பெற்ற ஏராளமான படுகொலைச் சம்பவங்களில் இவர் பங்குபற்றியவர் என்றும் கூறப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியே இன்றைய காத்தான்குடி துப்பாக்சிசூட்டுச் சம்பவத்திற்கும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறுகின்றார்கள் ஷகீட்டினுடைய நண்பர்கள்.

காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் காத்தான்குடியில் தேடுதல்வேட்டை மேற்கொண்டு வருவதாகவும், துப்பாக்கிச்சூடு நடாத்திய நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் காத்தான்குடிச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

பின் இணைப்பு:

காத்தான்குடி துப்பாக்கிச்சூட்டு சந்தேக நபரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளதாகத் தெரியவருகின்றது. 

GalleryGalleryGalleryGalleryGalleryமேலும் இது தொடர்பான செய்திகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Previous Post

கிளிநொச்சியில் ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன் 3 பேர் கைது

Next Post

தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்க தயார் ; அனந்தி சசிதரன் அறிவிப்பு!

Next Post
எனது கணவர் இராணுவத்திடம் சரணடைந்ததை நேரில் பார்த்தேன் | அனந்தி சசிதரன் பகீர் தகவல்!

தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்க தயார் ; அனந்தி சசிதரன் அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures