Tuesday, May 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Health

காதில் ஏற்படும் இரைச்சல் ( Tinnitus) பாதிப்பிற்கான நவீன சிகிச்சை

April 29, 2022
in Health, News
0
காதில் ஏற்படும் இரைச்சல் ( Tinnitus) பாதிப்பிற்கான நவீன சிகிச்சை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இன்றைய திகதியில் எம்முடைய இளைய தலைமுறையினர் தங்களுடைய கைகளில் ஆறாவது விரலாக கைப்பேசியை எப்போதும் உடன் வைத்திருக்கிறார்கள்.

அதேபோல் இவர்கள் காதுகளில் எயார் பொட்ஸ் என்ற பிரத்யேக காதொலி கருவிகளை பொருத்திக்கொண்டு பேசுவதும், பாடல்களைக் கேட்பதும் என வழக்கமாகிவிட்டது.

இந்நிலையில் இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு காதில் இரைச்சல் எனப்படும் பாதிப்பு ( Tinnitus) ஏற்படுவதாக வைத்தியர்களிடம் தெரிவிக்கிறார்கள்.

இத்தகைய பாதிப்பிற்குரிய சிகிச்சைகள் குறித்து வைத்தியர்கள் பின்வருமாறு விளக்கமளிக்கிறார்கள்.

பெரும்பான்மையானவர்கள் இரவு நேரங்களில் காதுகளில் ரீங்காரம் இடுவது போல் பிரத்யேக ஒலி கேட்பதாகவும், இதன் காரணமாக உறக்க நிலை பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கிறார்கள்.

வேறு சிலர் ஒலி மிகுந்த இடங்களில் பணியாற்றும் நேரங்களை விட, அமைதியான தருணங்களில் இத்தகைய இரைச்சல் மனதளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கிறார்கள்.

இத்தகைய பாதிப்பிற்கு வைத்தியத் துறையினர் டின்னிட்டஸ் ( Tinnitus) பாதிப்பு என வகைப்படுத்துகிறார்கள்.

தெற்காசிய நாடுகளில் 15 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகி இருக்கிறார்கள்.

இவர்களில் 20 சதவீதத்தினர் காதுகேளாமை பாதிப்பின் காரணமாக இதற்கு ஆளாக கூடும்.

காதின் அமைப்புகளில் உள்ள முன் காது, நடுக்காது, உள்காது ஆகிய பகுதிகளில் ஏதேனும் ஒரு பகுதியில் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் இத்தகைய கோளாறு உண்டாகலாம்.

காதில் உள்ள ஒலியை கடத்தும் நரம்புகளில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டாலும் இத்தகைய குறைபாடு ஏற்படக்கூடும்.

எம்முடைய வாய் பகுதியை திறந்து மூடுவதற்காக பயன்படுத்தப்படும் Temporomandibular Joint எனப்படும் பகுதியில் ஏற்படும் பாதிப்பின் காரணமாகவும் இத்தகைய நிலை உண்டாகலாம்.

பி12 மற்றும் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் இத்தகைய கோளாறு ஏற்படக்கூடும்.

உடலில் வேறு கோளாறுகளுக்காக நாட்பட்ட நிலையில் மாத்திரைகளை சாப்பிட்டு வருபவர்களுக்கு, அதன் பக்கவிளைவு காரணமாகவும் இந்த காது இரைச்சல் பாதிப்பு உண்டாகும்.

ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்த பாதிப்பின் காரணமாகவும் இவை உண்டாகலாம்.

இதற்கு உரிய தருணங்களில் சிகிச்சை பெறாவிட்டால் நாளடைவில் காது கேளாமை பாதிப்பு ஏற்படக்கூடும்.

வேறு சிலருக்கு உறக்கமின்மை பாதிப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக நினைவு திறன் இழப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு.

இதன் காரணமாக இதற்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் வைத்தியரைஅணுகி ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.

அறிகுறிகள் ஏற்பட்ட பிறகு அவர்களுக்கு கேட்கும் திறன் குறித்த பரிசோதனை, எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை, ரத்த பரிசோதனை ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அறிந்து கொள்ள வேண்டும்.

இவர்களுக்கு ரத்த நாளங்களில் ஏதேனும் அடைப்பு இருக்கிறதா? என்பதை பரிசோதித்து, அதற்குரிய சிகிச்சையை வழங்குவார்.

சிலருக்கு பிரத்யேக கருவியை பொருத்தி பாதிப்பின் தன்மையை குறைப்பர்.

சிலருக்கு Tinnitus Retraining Therapy , Cognitive Behavioral Therapy போன்ற சிகிச்சைகளை வழங்கி அவர்களை பாதிப்பிலிருந்து முழுமையாக மீட்க இயலும்.

இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்களில் ஐந்து சதவீதத்தினருக்கு மட்டுமே தீவிர பாதிப்பு ஏற்பட்டு, அவர்கள் சிகிச்சை பெறவேண்டிய அவசியம் உண்டாகிறது.

மேலும் இத்தகைய பாதிப்பு மூன்று நிலைகளில் உண்டாகும் இவற்றில் எந்த நிலையில் நோயாளி பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை துல்லியமாக அவதானித்து, அதற்கான சிகிச்சையை மேற்கொண்டால் இத்தகைய பாதிப்பிலிருந்து முழுமையாக நிவாரணம் பெற இயலும்.

டொக்டர் கிருஷ்ணகுமார்

தொகுப்பு அனுஷா.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

ஆப்கானிஸ்தானில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு 9 பேர் பலி

Next Post

தயாரிப்பாளர் தான் குலசாமி – அறிமுக நடிகர் அதிரடி பேச்சு

Next Post
தயாரிப்பாளர் தான் குலசாமி – அறிமுக நடிகர் அதிரடி பேச்சு

தயாரிப்பாளர் தான் குலசாமி - அறிமுக நடிகர் அதிரடி பேச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

யாழ். பல்கலை மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

யாழ். பல்கலை மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

May 13, 2025
குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவாகும் ‘மரகத மலை’

குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவாகும் ‘மரகத மலை’

May 13, 2025
தெற்கின் சமூகம் உணர்ந்தால் மாத்திரமே வடக்குடன் கைகோர்க்க முடியும் | அருட்தந்தை சத்திவேல்

வடகிழக்கு தமிழர்களின் அரசியல் தாகமும் பயண இலக்கும் மாற்றமடையவில்லை | அருட்தந்தை மா.சத்திவேல்

May 13, 2025
செப்டம்பரில் வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பனி’

செப்டம்பரில் வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பனி’

May 13, 2025

Recent News

யாழ். பல்கலை மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

யாழ். பல்கலை மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

May 13, 2025
குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவாகும் ‘மரகத மலை’

குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவாகும் ‘மரகத மலை’

May 13, 2025
தெற்கின் சமூகம் உணர்ந்தால் மாத்திரமே வடக்குடன் கைகோர்க்க முடியும் | அருட்தந்தை சத்திவேல்

வடகிழக்கு தமிழர்களின் அரசியல் தாகமும் பயண இலக்கும் மாற்றமடையவில்லை | அருட்தந்தை மா.சத்திவேல்

May 13, 2025
செப்டம்பரில் வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பனி’

செப்டம்பரில் வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பனி’

May 13, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures