Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

காதலியின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற காதலன் கைது

November 1, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

காதலியின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகக் கூறப்படும் காதலன் இரத்தினபுரி, வெவெல்வத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

கைது செய்யப்பட்ட காதலனும் இரத்தினபுரி , வெவெல்வத்த பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய காதலியும் நீண்ட நாட்களாகக் காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேக நபரான காதலன், தங்களது திருமணம் தொடர்பில் குடும்பத்தினருடன் கலந்துரையாடவுள்ளதாக கூறி காதலியிடம் ஒரு இலட்சம் ரூபா பணம் கோரியுள்ளார்.

இதனால், இந்த காதலி சந்தேக நபரான காதலனிடம் பணம் மற்றும் தங்கச் சங்கிலி ஆகியவற்றைக் கொடுத்துள்ளார்.

பின்னர், சந்தேக நபரான காதலன் தனது காதலியிடம் மேலும் பணம் தேவைப்படுவதாகக் கூறியுள்ளார். 

காதலி பணம் வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்ததால் சந்தேக நபரான காதலன் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதாகக் கூறி அச்சுறுத்தி காதலியிடம் பணம் கோரியுள்ளார்.

பின்னர், பாதிக்கப்பட்ட காதலி இது தொடர்பில் வெவெல்வத்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous Post

ஊடக சுதந்திரம் குறித்து பேசிய ஜனாதிபதி இன்று ஊடகங்களுக்கு அழுத்தங்களை கொடுக்க ஆரம்பித்துள்ளார் – சஜித் பிரேமதாச

Next Post

தேங்காய் விலையேற ரணிலும் மகிந்தவுமே பொறுப்பு கூற வேண்டும்: அநுர தரப்பின் ரிவின் சில்வா

Next Post
வடக்க கிழக்கு தமிழர்களின் உண்மையான அபிலாஷைகளை தேசிய மக்கள் சக்தி புரிந்துகொள்ளவில்லை

தேங்காய் விலையேற ரணிலும் மகிந்தவுமே பொறுப்பு கூற வேண்டும்: அநுர தரப்பின் ரிவின் சில்வா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures