காணாமற்போனோர் பணியகத்துக்குத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை யானது முக்கியமானதொரு நகர்வு என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.
காணாமற்போனோர் பணியகத்துக்கான தலைவர் மற் றும் உறுப்பினர்களுக்கு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் நியமனக் கடிதங்களை வழங்கினார்.
இது தொடர்பாக அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தமது கீச்சகப் பக்கத்தில் குறிப்பு வெளியிட்டுள்ளார். வலுவான, சுதந்திரமான, காணாமற்போனோருக்கான பணியகத்தின் உருவாக்கமானது, இலங்கையின் அனைத்து மக்களுக்கும், குறிப்பாக தமது அன்புக்குரியவர்கள் தொடர்பான பதிலைத் தேடுகின்ற மக்களுக்கு, நிலையான அமைதி, மீள நிகழாமை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கு ஒரு முக்கியமான நகர்வாகும் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.