Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காட்டுத் தீயில் சிக்கிவர்களில் 9 பேர் பலி

March 12, 2018
in News, Politics, Uncategorized, World
0

குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கிவர்களில் 9 பேர் உயிரிழந்தனர். இதுவரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் மலையேறும் பயிற்சிக்காக சென்னையில் இருந்து 24 பேரும், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து 12 பேரும் சென்றிருந்தனர்.

கொழுக்குமலைப் பகுதியில் இருந்து நேற்று இரவு அவர்கள் அனைவரும் மீண்டும் அடிவாரத்துக்கு திரும்பிய போது, திடீரென காட்டுத் தீ பற்றிக்கொண்டது. இரு குழுவினரும் அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர்.

உடனடி நடவடிக்கையாக மலைப்பகுதியில் இருப்பவர்களை கண்டறிவதற்காக ஹெலிகாப்டர் அனுப்பி வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதே நேரம் உள்ளூர் மக்களும் உடனடியாக களத்தில் இறங்கினர்.

காயமடைந்தவர்களை தோளில் சுமந்தபடி அடிவாரத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் படுகாயமடைந்தவர்கள் மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதுவரை மொத்தம் 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Previous Post

உணவு ஒவ்­வா­மை : 75 பேர் வரை­யில் நேற்று மாலையே வீடு திரும்­பி­னர்

Next Post

ஜெனிவா அமர்­வில் இலங்கை விவ­கா­ரம் எதிர்­வ­ரும் 16ஆம் திகதி

Next Post

ஜெனிவா அமர்­வில் இலங்கை விவ­கா­ரம் எதிர்­வ­ரும் 16ஆம் திகதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures