Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

கவிஞர் பா விஜய் இயக்கத்தில் நடிக்கும் பிரபுதேவா

August 9, 2021
in Cinema, News
0
கவிஞர் பா விஜய் இயக்கத்தில் நடிக்கும் பிரபுதேவா

பாடலாசிரியரும் இயக்குனரும், நடிகருமான பா. விஜய் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக ‘நடனப்புயல்’ பிரபுதேவா நடிக்கிறார்.

நடன இயக்குனர், திரைப்பட இயக்குனர், நடிகர் என பன்முக திறமையுடன் உலாவரும் ‘நடனப்புயல்’ பிரபுதேவா, பாடலாசிரியரும், இயக்குனருமான பா. விஜய் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

 

இவருக்கு ஜோடியாக நடிகை மஹிமா நம்பியார் நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் கலையரசன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தீபக் குமார் ஃபாதே ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, கணேசன் சேகர் இசையமைக்கிறார்.

படத்தை பற்றி இயக்குனர் பா. விஜய் பேசுகையில்,’ உண்மை சம்பவத்தின் அடிப்படையில் தயாராகியிருக்கும் திரைக்கதை இது.

கிரைம் திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்தப் படத்தில் ஹாரர் பட அம்சங்களும் இடம்பெற்றிருக்கிறது.

பிரபுதேவா புதிய தோற்றத்தில் இப்படத்தில் நடிக்கிறார். நடிகை மஹிமா நம்பியார் கதையின் நாயகியாகவும், காட்டிலாகா அதிகாரியாகவும் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு 50 சதம் அடர்ந்த வனப் பகுதிகளில் படமாக்கப்படவிருக்கிறது. மூன்று கட்டங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

சென்னையில் பிரம்மாண்டமாக பிரத்யேக அரங்கத்தை வடிவமைத்து அதில் படப்பிடிப்பு நடத்தப்படும். மூன்றாவது கட்டமாக வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது’ என்றார்.

‘ஸ்ட்ராபெர்ரி’, ‘ஆருத்ரா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பா. விஜய் இயக்கத்தில் தயாராகும் இந்தப் படத்தை எம்.எஸ்.மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் புதுமுக தயாரிப்பாளர் கே. முருகன் தயாரிக்கிறார்.  இதன் தொடக்க விழா அண்மையில் சென்னையில் எளிமையாக நடைபெற்றது.

_____________________________________________________________________________

உடனுக்குடன், உவப்பான செய்திகளுக்கு: http://Facebook page / easy 24 news  

Previous Post

ரிஷாத்தின் மனைவி உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Next Post

தடுப்பூசி செலுத்தப்பட்ட யாத்ரீகர்களுக்கு மீண்டும் எல்லைகளைத் திறந்த சவுதி அரேபியா

Next Post
தடுப்பூசி செலுத்தப்பட்ட யாத்ரீகர்களுக்கு மீண்டும் எல்லைகளைத் திறந்த சவுதி அரேபியா

தடுப்பூசி செலுத்தப்பட்ட யாத்ரீகர்களுக்கு மீண்டும் எல்லைகளைத் திறந்த சவுதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures