Monday, September 15, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கல்முனை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிழக்கில் ஹர்த்தால்

June 20, 2019
in News, Politics, World
0

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு வலியுறுத்தி மதத்தலைவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

அதற்கமைய கிழக்கின் பல பகுதிகள் இன்று   மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கிழக்கு மாகாண மாணவர் பேரவை துண்டுப்பிரசுரங்கள் மூலம் அழைப்பு விடுத்திருந்தது.

அதற்கமையவே மட்டக்களப்பில் இன்று பூரண ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படுகிறது.

மட்டக்களப்பிலுள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதோடு, போக்குவரத்துச் சேவைகள் மட்டுப்படுத்தபட்டுள்ளதாகவும்

மேலும் பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகையும் மிகவும் அரிதாகவே காணப்பட்டதாகவும்  கூறப்படுகிறது .

அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை திங்கட்கிழமை 9 மணியளவில் ஆரம்பித்திருந்தனர்.

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் ஆதரவு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

நான்காவது நாளாகவும் தொடர்கிறது மதத் தலைவர்களின் போராட்டம்

Next Post

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Next Post

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures