சினிமாவில் நடித்து, மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன் ஆகிய படங்களுக்காக, தேசிய விருது பெற்றவர் கமல்ஹாசன். அதோடு, பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளும் பெற்றுள்ளார். ‘மக்கள் நீதி மையம்’ கட்சியின் கொள்கைகளை பரப்புவதற்காகவும், நாட்டில் நடக்கும் தவறுகளை வெளிச்சம் போடவும், ‘மையம் விசில்’ என்ற செயலியை அறிமுகம் செய்திருந்தார். அதையடுத்து, வணிக நோக்கமில்லாமல், சமூக நோக்கத்துடன் செயல்பட்டதற்காக, அவரது, ‘மையம் விசில்’ இந்தியாவின் சிறந்த செயலி என்று அங்கீகரிக்கப்பட்டு, வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.