தமிழ்நாட்டின் கண்ணியாகுமரி மாவட்டத்தில் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 3ம் திகதி குவைத்தில் இருந்து நாடு திரும்பியிருந்த கண்ணியாகுமரி, கோடிமுனை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் கொரோனா அறிகுறியுடன் கொரோனா சிறப்பு விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவருக்கு ஏற்கனவே முளைக்காய்ச்சல் மற்றும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதே சற்று முன்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்காக திருநெல்வேலி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் முடிவுகள் கிடைக்க முன்னர் உயிரிழந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது இரத்த பரிசோதனை முடிவுகளின் பின்னரே உயிரிழப்புக்கு காரணம் தெரியவரும்.

