Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கண்டியின் சில பகுதிகளில் நில அதிர்வு

August 30, 2020
in News, Politics, World
0

கண்டி – தலாத்து ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பாக விசேட ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதற்கமைய இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக குறித்த பகுதிகளுக்கு விசேட குழுவினர் சென்றுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் குறிப்பிட்டுள்ளது.

கண்டி – தலாத்து ஓயாவை அண்மித்த திகண, அளுத்ஹேன, அம்பக்கோட்டே, ஹாரகம மற்றும் குருதெனிய ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 8.34 மணியளவில் சிறியளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இதுவொரு நிலநடுக்கம் அல்லவெனவும் இது குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் அந்தப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்தார்.

மேலும் நிலநடுக்கமொன்று ஏற்பட்டிருக்குமாயின், தமது பணியகத்தின் கீழுள்ள 05 மத்திய நிலையங்களில் அது குறித்து பதிவாகியிருக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக குறித்த பகுதிகளுக்கு விசேட குழுவினர் சென்றுள்ளதாக அனுர வல்பொல தெரிவித்தார்.

Previous Post

ஆற்றில் கூடமைத்து வளர்க்கப்பட்ட மீன்கள் திருட்டு!!

Next Post

322 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்

Next Post

322 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures