Wednesday, July 30, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

‘கண்கவர் அழகி’ டயானா ‘மக்களின் இளவரசி’ஆன கதை

September 30, 2022
in News, Sri Lanka News, கட்டுரைகள், முக்கிய செய்திகள்
0
‘கண்கவர் அழகி’ டயானா ‘மக்களின் இளவரசி’ஆன கதை
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

 உலகளவில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட வரலாற்று டிராமாவான ‘தி கிரவுன்’, அதன் நான்காவது சீசனை நெட்ஃப்ளிக்ஸில் வெளியிட்டிருக்கிறது. இரண்டாம் எலிசபெத் ராணியின் ஆட்சியை விவரிக்கும் இந்தத் தொலைக்காட்சித் தொடரை உருவாக்கி எழுதியவர் திரைக்கதை எழுத்தாளரும் நாடக ஆசிரியருமான பீட்டர் மோர்கன். இந்தத் தொடர், ப்ரைம் டைம் எம்மி விருதுகளில் அதன் முதல் மூன்று சீசன்களில் மொத்தம் 39 விருது பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.

லேடி டயானா ஸ்பென்சர் மற்றும் இளவரசர் சார்லஸுடனான திருமணத்தைக் கொண்டிருப்பதால், சமீபத்திய சீசன் மீண்டும் மிகுந்த ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. எம்மா கோரின் ‘மக்கள் இளவரசி’ பாத்திரத்தில் நடித்துள்ளார்.

வேல்ஸ் இளவரசி டயானா யார்?

டயானா ஃபிரான்சஸ் ஸ்பென்சராகாப் பிறந்த இவர், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகனும், பிரிட்டிஷ் அரியணைக்கு வெளிப்படையான வாரிசுமான வேல்ஸ் இளவரசர் சார்லஸுடன் திருமணம் முடிந்தபின், பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் உறுப்பினரானார். இந்த ஜோடிக்கு வில்லியம் மற்றும் ஹாரி என இரண்டு மகன்கள் உள்ளனர்.

டயானா, பிரிட்டிஷ் பிரபுக்களின் உறுப்பினராகவும், ஜான் ஸ்பென்சரின் இளைய மகளாகவும், 8-வது ஏர்ல் ஸ்பென்சராகவும் அறியப்படுகிறார். அவர் குழந்தையாக இருந்தபோது அவருடைய பெற்றோர்கள் விவாகரத்து பெற்றனர். இந்த நிகழ்வு டயானாவின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்தில் அரச குடும்பத்துடன் நெருக்கமாக டயானா வளர்ந்தார். 1978-ம் ஆண்டில், அவர் லண்டனுக்குக் குடிபெயர்ந்தார். ஓர் அபார்ட்மென்ட்டில் உடன் குடியிருப்பவர்களோடு வாழ்ந்து, குறைந்த ஊதியம் பெறும் பல்வேறு வேலைகளைச் செய்திருக்கிறார். 1981-ம் ஆண்டில் சார்லஸுடனான நிச்சயதார்த்தத்திற்குப் பின்னர் அவர் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தார். மேலும், அவருடைய சமூக செயல்பாடும் கண்கவர் அழகும் விரைவில் அவரை ஓர் சர்வதேச ஐகானாக மாற்றி, அவருக்கு ‘மக்கள் இளவரசி’ என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தன.

அரச திருமணம்

லேடி டயானா தனது 16 வயதில் இளவரசர் சார்லஸை முதல் முதலில் சந்தித்தபோது, சார்லஸ் தனது மூத்த சகோதரியான லேடி சாராவுடன் டேட்டிங் உறவில் இருந்தது, நாட்டின் வார இறுதி சந்திப்பு, சார்லஸ் போலோ விளையாடுவதைப் பார்ப்பது; அரச குடும்பத்தின் ஸ்காட்டிஷ் இல்லமான பால்மோரலுக்கு தனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட அழைப்பு; மற்றும் அரச திருமணத்தின் காட்சிகள் உள்ளிட்டவை தி கிரவுன் புதிய சீஸனில் உள்ள சிறப்பம்சங்களில் சில.

“நூற்றாண்டின் திருமணம்” என்று அழைக்கப்படும் இந்த அரச திருமணம் 1981 ஜூலை 29 அன்று செயின்ட் பால்ஸ் கதீட்ரலில் 2,650 விருந்தினர்கள் முன்னிலையில் நடந்தது. 18-ம் நூற்றாண்டின் ஸ்பென்சர் குடும்ப தலைப்பாகையுடன் ஜோடியாகப் பட்டு மற்றும் பழங்கால சரிகை மற்றும் 10,000 முத்துக்களால் செய்யப்பட்ட டயானாவின் டஃபெட்டா திருமண உடை, 25 அடி வெய்லுடன் (veil) இருந்தது. இதுவே அந்த காலத்தில் மிக நீளமாக இருந்த வெய்ல். இந்த விழா உலகம் முழுவதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதனை, 74 நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 750 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.

Diana known as People's Princess explained in Tamil Queen Elizebeth Prince Charles
Diana known as People’s Princess Prince & Charles

சிக்கலான திருமண வாழ்க்கை

சார்லஸ் மற்றும் டயானா இடையேயான நிம்மதியற்ற மற்றும் கஷ்டமான உறவை தி கிரவுன் கவனத்தில் கொள்கிறது. அதாவது, இருவருக்குமிடையேயான பிளவுகொண்ட வாதங்கள் மற்றும் திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் குறித்த கடுமையான யதார்த்தத்தைக் காட்சிப்படுத்தியிருக்கிறது.

திருமணத்தின் ஆரம்ப நாட்களில் கூட, சார்லஸ் தனது முன்னாள் காதலியான காமிலா பார்க்கர் பவுல்ஸை சார்ந்திருந்தார். 2005-ல் காமிலாவை சார்லஸ் திருமணம் செய்து, அவரை டச்சஸ் ஆஃப் கார்ன்வாலாக மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்பத்தின் முன்னாள் சவாரி பயிற்றுவிப்பாளரான மேஜர் ஜேம்ஸ் ஹெவிட்டுடன் டயானாவும் உறவில் இருந்தார். 1987-ல், சார்லஸ்-டயானா இருவருக்கும் தங்களின் திருமண உறவில் ஏற்பட்டிருக்கும் விரிசல் மக்களுக்கு தெரிய ஆரம்பித்தது.

அதனைத் தொடர்ந்து, 1992 டிசம்பரில், பிரதமர் ஜான் மேஜர் இந்தத் தம்பதியினரின் “இணக்கமான பிரிவினை” பொது மன்றத்திற்கு அறிவித்தார். 1995-ம் ஆண்டில், பிபிசி பத்திரிகையாளர் மார்ட்டின் பஷீருடனான தனது பனோரமா நேர்காணலின் போது, “இந்த திருமணத்தில் நாங்கள் மூன்று பேர் இருந்தோம், எனவே இது சற்று அதிகம்” என டயானா கூறினார். இதனைக் கருத்தில் கொண்டு, சார்லஸ் மற்றும் டயானாவுக்கு கடிதம் எழுதி விவாகரத்து செய்ய ராணி அறிவுறுத்தினார். இதற்குப்பின் ஆகஸ்ட் 1996-ல் இவர்களுடைய விவாகரத்து உறுதி செய்யப்பட்டது.

புலிமியாவுடன் டயானாவின் போராட்டம்

டயானாவின் புலிமியாவுடனான போராட்டத்தைச் சித்தரிக்கப்பட்டிருப்பது தி கிரவுனின் முக்கிய பகுதி. இது உயிருக்கு ஆபத்தான உணவுக் கோளாறு. தனது வாழ்நாளில், வேல்ஸ் இளவரசி, மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு, சுய-சிதைவு மற்றும் புலிமியா ஆகியவற்றைக் கையாள்வது பற்றி பகிரங்கமாகப் பேசியிருக்கிறார். இதுவே குறைந்த சுயமரியாதையும் மகிழ்ச்சியற்ற திருமணத்திற்கு வழிவகுத்திருக்கக்கூடும் என்பதைக் குறிக்கிறது. “என் கணவர் என் இடுப்பில் கை வைத்து, ‘ஓ, இங்கே கொஞ்சம் சதைபிடித்திருக்கிறது, இல்லையா?’ என்றார். அது என்னுள் ஏதோ ஒன்றைத் தூண்டியது” என ஆண்ட்ரூ மோர்டனின் 1997-ம் ஆண்டு டயானா சுயசரிதை : அவருடைய உண்மை கதை – சொந்த வார்த்தைகளில் எனும் புத்தகத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.

பிபிசி நேர்காணலுக்காக பஷீருடன் அவர் அதைப் பற்றி பேசியபோது, தனக்கு புலிமியா “பல ஆண்டுகளாக” இருப்பதாக ஒப்புக் கொண்டார். மேலும், இது ஒரு “ரகசிய நோய். எனது திருமணத்தில் என்ன நடக்கிறது என்பதற்கான அறிகுறி” என்றும் விவரித்துள்ளார் டயானா.

டயானாவின் நேர்மையான ஒப்புதல் வாக்குமூலம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில், அந்தக் காலகட்டத்தில் உணவுக் கோளாறுகள் அரிதாகவே வெளிப்படையாகப் பேசப்பட்டன. தி கிரவுனில் பணிபுரியும் தயாரிப்பு நிறுவனமான லெப்ட் பேங்க் பிக்சர்ஸ், டயானாவின் புலிமியாவின் சித்தரிப்பு “துல்லியமாகவும், உணர்ச்சிகரமாகவும் கையாளப்படுவதை” உறுதி செய்வதற்காக, பீட் என்ற உணவுக் கோளாறு தொண்டு நிறுவனத்துடன் நெருக்கமாக பணியாற்றியதாக ஒரு அறிக்கையில் கூறியிருந்தது.

உலகளாவிய புகழ் மற்றும் செயல்பாடு

டயானாவின் முதல் சர்வதேச சுற்றுப்பயணமாக, 1983-ம் ஆண்டில் இளவரசர் சார்லஸுடன் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்குச் சென்றார். அவர்களின் மகன் இளவரசர் வில்லியமம் அவர்களுடன் சென்றதாகச் செய்தி வெளியிட்டார். இது அந்த நேரத்தில் அசாதாரணமானது. ராயல் குடும்ப உறுப்பினர்கள் வழக்கமாக உத்தியோகபூர்வ சுற்றுப்பயணங்களில் தங்கள் குழந்தைகளை வீட்டிலேயே விட்டுச்செல்வார்கள். இந்த ஜோடி பெரும் கூட்டத்தை ஈர்த்ததால் இந்த சுற்றுப்பயணம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால், பத்திரிகைகள் சார்லஸை விட டயானா மீது அதிக கவனம் செலுத்தியது. மேலும், ‘டயானமேனியா’ என்ற வார்த்தையை உருவாக்கியது. இது, டயானா மீது மக்கள் கொண்டிருந்த ஆர்வத்தைக் குறிப்பிடுகிறது.

Diana known as People's Princess explained in Tamil Queen Elizebeth Prince Charles
Emma Corrin plays Diana in The Crown

நேர்த்தியான மற்றும் சுறுசுறுப்பான இளவரசி மீதான உலகளாவிய ஆர்வம் 1980-களில் வெளிநாட்டில் ராயல் குடும்பத்தின் இடத்தை மேலும் உயர்த்தியது. 1989-ம் ஆண்டு நியூயார்க்குக்கான தனது தனி பயணத்தின் போது, டயானா ஹார்லெம் மருத்துவமனை மையத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஏழு வயதுக் குழந்தையைத் தன்னிச்சையாகக் கட்டிப்பிடிப்பதன் மூலம் பொதுமக்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார். நியூயர்க் டைம்ஸ் டயானாவை “புதிய காற்றின் சுவாசம்” என்று விவரித்தது, அவர் அமெரிக்காவில் அரச குடும்பம் அறியப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

1997-ம் ஆண்டில், டயானா இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு, பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துகொண்டு, அங்கோலாவின் ஹுவாம்போவில் ஓர் நிலச் சுரங்க வயல் வழியாக நடந்து, அதுவரை யாராலும் கவனிக்கப்படாத ஒரு பிரச்சினைக்குச் சர்வதேச கவனத்தை ஈர்த்தார். கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளின் சுயவிவரத்தை உலகம் முழுவதும் எழுப்பினார்.

வீடற்றவர்கள், இளைஞர்கள், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், முதியவர்கள் மற்றும் தொழுநோய் உள்ளிட்ட கடுமையான நோய்களுக்கு பணிபுரிந்த டயானா பல தொண்டு நிறுவனங்களின் புரவலராக இருந்தார். “தொண்டு மீதான அவரது ஒட்டுமொத்த விளைவு 20-ம் நூற்றாண்டில் இருந்த எந்தவொரு நபரையும் விட முக்கியமானது” என இங்கிலாந்து இன்ஸ்டிடியூட் ஆப் சேரிட்டி நிதி திரட்டும் மேலாளர்களின் இயக்குநர் ஸ்டீபன் லீ கூறினார்.

ஊடகங்களுடனும் பாப்பராசியுடனுமான உறவு

1982-ம் ஆண்டில், சார்லஸ் மற்றும் டயானா பஹாமாஸுக்குச் சென்றபோது அவர்களை பாப்பராசி பின்தொடர்ந்தனர். அப்போது இளவரசர் வில்லியமுடன் கர்ப்பமாக இருந்த டயானாவை பிகினியில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்த வெளியீட்டை “பிரிட்டிஷ் பத்திரிகை வரலாற்றில் கறுப்பு நாள்” என்று ராணி அழைத்தார்.

டயானா மற்றும் சார்லஸின் திருமணத்தை 750 மில்லியன் மக்கள் பார்த்ததிலிருந்து, பாப்பராசி அவர்களுடைய ஒவ்வொரு அசைவையும் ஆவணப்படுத்தத் தொடங்கினர். விரைவில், அவர் உலகிலேயே அதிக புகைப்படம் எடுத்த நபர்களில் ஒருவரானார். திருமண முரண்பாடு முதல் விவாகரத்து மற்றும் அதன் பின்விளைவு வரை அவருடைய வாழ்நாள் முழுவதும் டேப்ளாய்ட் தீவனமாக மாறியது. அவருடைய ஒவ்வொரு படங்களுக்காக, புகைப்படக்காரர்களுக்கு, 500,000 பவுண்டுகள் வரை வழங்கப்பட்டது. பிரபல புகைப்படக் கலைஞர் ஜேசன் ஃப்ரேசர், டயானாவின் புகைப்படங்களை எகிப்திய திரைப்படத் தயாரிப்பாளரும் அவரது வதந்தியான காதலனுமான டோடி ஃபயீதுக்கு விற்பனை செய்து, 1 மில்லியனுக்கும் அதிகமாக சம்பாதித்துள்ளார்.

டயானாவின் இறுதிச் சடங்கில், அவரின் சகோதரர் சார்லஸ் ஸ்பென்சர் டயானாவை, “நவீன யுகத்தின் மிகவும் வேட்டையாடப்பட்ட நபர்” என்று விவரித்தார்.

திடீர் மரணம்

ஆகஸ்ட் 1997-ல் டயானா, பாரிஸில் ஃபாயீத்துடன் பிரெஞ்சு ரிவியராவில் 10 நாள் பயணத்திற்காக இருந்தார். பாரிஸில் உள்ள ரிட்ஸ் ஹோட்டலில் உள்ள தனியார் வரவேற்பறையில் உணவருந்திய பின்னர் அவர்கள் காரில் பயணிக்கத் தொடங்கினர். பாப்பராஸியை விட்டு வெளியேற முயன்றபோது, ஓட்டுநர் ஹென்றி பால் சுமார் 70 மைல் வேகத்தில் ஓர் சாலை சுரங்கப்பாதையின் நுழைவாயிலை அணுகியதாகக் கூறப்படுகிறது. வேக வரம்பு 30 மைல் என்பது குறிப்பிடத்தக்கது. காரின் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையின் நடுவில் ஒரு தூணில் மோதியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபயீத் மற்றும் பால் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். பிட்டிக்-சல்பாட்ரியர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற டயானா தன் இறுதி மூச்சை அங்கு சுவாசித்தார். டயானாவின் மெய்க்காப்பாளரான ட்ரெவர் ரீஸ்-ஜோன்ஸ் விபத்திலிருந்து தப்பினார். மேலும் அவர் மட்டுமே சீட் பெல்ட் அணிந்தவர் என்று கூறப்படுகிறது. ஓட்டுநர் பாலின் போதை, பொறுப்பற்ற வாகனம் ஓட்டுதல், வேகம் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் விளைவுகள் ஆகியவற்றால் இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் முடிவு செய்யப்பட்டது.

டயானாவின் திடீர் மரணம் இங்கிலாந்து மற்றும் உலகம் முழுவதும் துக்கத்தை ஏற்படுத்தியது. தொலைக்காட்சி வாயிலாக அவருடைய இறுதிச் சடங்குகளை உலகம் முழுவதும் 2.3 பில்லியனுக்கும் அதிகமான கண்கள் பார்த்தன. மக்கள் பூக்கள், மெழுகுவர்த்திகள், அட்டைகள் மற்றும் தனிப்பட்ட செய்திகளை கென்சிங்டன் அரண்மனைக்கு வெளியே பல மாதங்களாக விட்டுச்சென்றனர்.

பாப் கலாச்சாரம்

டயானா மற்றும் சார்லஸைப் பற்றிய முதல் வாழ்க்கை வரலாறு, சார்லஸ் மற்றும் டயானா: எ ராயல் லவ் ஸ்டோரி, மற்றும் தி ராயல் ரொமான்ஸ் ஆஃப் சார்லஸ் மற்றும் டயானா ஆகியவை 1981-ல் அமெரிக்கத் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டன.

1992-ம் ஆண்டில், சார்லஸ் மற்றும் டயானா: மகிழ்ச்சியற்ற வாழ்க்கை என்ற தலைப்பில் ஒரு தொலைக்காட்சி திரைப்படத்தை அவர்களின் திருமண முரண்பாடு பற்றி ஏபிசி ஒளிபரப்பியது. 2007 ஆவணப்படம் டயானா: இளவரசியின் கடைசி நாட்கள்  என்ற தலைப்பில் தனது வாழ்க்கையில் இறுதி இரண்டு மாதங்களை விவரிக்கிறார். இதில், ஐரிஷ் நடிகை ஜெனிவீவ் ஓ’ரெய்லி டயானாவாக சித்தரிக்கப்படுகிறார்.

2017-ம் ஆண்டில், இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹாரி, டயானா மரணத்தின் 20-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இரண்டு ஆவணப்படங்களை நியமித்தனர்

Previous Post

நடிகர் விஷால் வீட்டின் மீது தாக்குதல்

Next Post

5 ஜி சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

Next Post
3 வேளாண் சட்டங்களும் வாபஸ் | பிரதமர் மோடி திடீர் அறிவிப்பு

5 ஜி சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இலங்கையர்களுக்கு இலவச விசா அறிவித்த நாடு: வெளியான மகிழ்ச்சி தகவல்

இலங்கையர்களுக்கு இலவச விசா அறிவித்த நாடு: வெளியான மகிழ்ச்சி தகவல்

July 30, 2025
“சமூக வலைத்தளங்கள் மூலம் இடம்பெறும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” – மட்டக்களப்பில் பேரணி

“சமூக வலைத்தளங்கள் மூலம் இடம்பெறும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” – மட்டக்களப்பில் பேரணி

July 30, 2025
இலங்கையில் ஊடக சுதந்திரத்தைக் காக்க வேண்டும்

இலங்கையில் ஊடக சுதந்திரத்தைக் காக்க வேண்டும்

July 30, 2025
யாழ். செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வு

செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் 4 புதிய எலும்புத் தொகுதிகள் அடையாளம்!

July 30, 2025

Recent News

இலங்கையர்களுக்கு இலவச விசா அறிவித்த நாடு: வெளியான மகிழ்ச்சி தகவல்

இலங்கையர்களுக்கு இலவச விசா அறிவித்த நாடு: வெளியான மகிழ்ச்சி தகவல்

July 30, 2025
“சமூக வலைத்தளங்கள் மூலம் இடம்பெறும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” – மட்டக்களப்பில் பேரணி

“சமூக வலைத்தளங்கள் மூலம் இடம்பெறும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” – மட்டக்களப்பில் பேரணி

July 30, 2025
இலங்கையில் ஊடக சுதந்திரத்தைக் காக்க வேண்டும்

இலங்கையில் ஊடக சுதந்திரத்தைக் காக்க வேண்டும்

July 30, 2025
யாழ். செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வு

செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் 4 புதிய எலும்புத் தொகுதிகள் அடையாளம்!

July 30, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures