Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Health

கண்களில் ‘ஸ்ட்ரெஸ்’ வரக் காரணம் என்ன? சரி செய்வது எப்படி?

June 21, 2021
in Health, News
0
கண்களில் ‘ஸ்ட்ரெஸ்’ வரக் காரணம் என்ன? சரி செய்வது எப்படி?

லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்தும் போது அவற்றிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு கண்களில் உள்ள விழிவெண்படலத்தை பெருமளவு பாதிக்கின்றன.

மனித உறுப்புகளில் மிகவும் மென்மையானது கண். உடலில் ஏற்படும் பல்வேறு நோய்கள், சம்பந்தப்பட்ட உறுப்புகளை பாதிப்பதோடு அல்லாமல் பல நேரங்களில் கண்களையும் பாதிப்பதுண்டு. அதனால் நாம் கண்களை கவனமாக பாதுகாக்க வேண்டும். கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். பொதுவாக கண்களை தூரப்பார்வைக்கு மட்டுமே பயன்படுத்துவது நல்லது.

நம்மில் பெரும்பாலோனோர் நீண்ட நேரம் செல்போன் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இப்படி நீண்ட நேரமாக செல்போனை கண்களுக்கு அருகே வைத்து பார்ப்பதால் அதன் கதிர்வீச்சுகளால் கண்கள் வெகுவாக பாதிக்கப்படுகிறது. கம்ப்யூட்டர், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில் வேலை செய்பவர்கள் தினமும் 12 முதல் 16 மணிநேரம் வரை தொடர்ந்து அவற்றை பயன்படுத்துகின்றனர். அதுபோன்ற நீண்ட நேரம் அவற்றை பயன்படுத்துவதால் அவற்றிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சுக்ள் கண்களை வெகுவாக பாதிக்கின்றன. கூடவே இலவச இணைப்பாக தலைவலி, கண்வலி போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்துகின்றன.

செல்போன் லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்து போது அவற்றிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு கண்களில் உள்ள விழிவெண்படலத்தை பெருமளவு பாதிக்கின்றன. சாதாரணமாக நாம் ஒரு நிமிடத்தில் பலமுறை கண்களை சிமிட்டுவோம். ஆனால் செல்போனை பார்த்து கொண்டிருக்கும் போது குழந்தைகள் கண்களை இமைக்க மறந்து விடுகின்றனர். கூடவே இரண்டு, மூன்று நிமிடங்கள் கூட கண்களை இமைக்காமல் செல்போனை கூர்ந்து நோக்கி கொண்டிருக்கிறார்கள்.

இதுபோன்று நீண்டநேரம் பார்ப்பதால் கண்ணின் விழி வெண்படலத்துக்கு மேலுள்ள ஈரப்பதம் வறட்சியடைந்து கண்களில் எரிச்சல் நீர் வடிதல், அழுத்தம் போன்றவை ஏற்படும். கூடவே கண்கள் சிவந்து தலைவலியும் ஏற்படும். இதுபோன்ற பாதிப்புகளிலிருந்து தற்காத்துக்கொள்ள செல்போன், ஐபேட், லேப்டாப் போன்ற கேட்ஜெட்டுகளை குறைந்தபட்சம் 30 செ.மீ. தொலைவில் வைத்து பார்ப்பது நல்லது. இவற்றை அதிக வெளிச்சத்திலோ மிகக்குறைவான வெளிச்சத்திலோ வைத்து பயன்படுத்த வேண்டும். 20 நிமிடத்துக்கு மேலாக தொடர்ந்து இந்த கேட்ஜெட்டுகளை பயன்படுத்தக்கூடாது. செல்போன் உள்ளிட்ட கேட்ஜெட்டுகளை பயன்படுத்தும் போது சிறிது இடைவெளி விட்டு பசுமையான இடங்களை பார்க்க வேண்டும். இப்படி செய்வது சிலியரி தசைகளுக்கு நல்லது.

கண்களில் ஏற்படும் ஸ்ட்ரெஸை போக்க சில ஆலோசனைகள்..

* சிறிது நேரம் கண்களை மூடி இமைகள் மீது ஒரு துண்டு வெள்ளிக்காயை வைக்கலாம்.

* கண் சொட்டு மருந்தையும் பயன்படுத்தலாம்

* கம்ப்யூட்டர் லேப்டாப் போன்றவற்றில் எழுத்துக்களை பெரிதுபடுத்திகொள்ளலாம். தெளிவாக தெரியும், எளிமையான எழுத்து வகைகளை பயன்படுத்தலாம்.

* கணினியின் திரை கண்பார்வை கோட்டிற்கு கீழே அமையும் படி பார்த்துகொள்ள வேண்டும்.

* கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும் போது சிறுசிறு இடைவேளைகளை எடுத்துகொள்வது மிகவும் அவசியமாகும்.

* ஏசி இருந்தால் அது முகத்தில் படும்படி அமரக்கூடாது.

* மேஜை விளக்குகளை பயன்படுத்தலாம்.

http://Facebook page / easy 24 news

Previous Post

கொரோனா பாதிப்பு: தந்தை இறந்த ஒரே மாதத்தில் உயிரிழந்த பிரபல பாடகி

Next Post

அரசாங்க தகவல் நிலையத்தின் தமிழ் மொழிக் கொலையை கண்டித்து நீதியரசர் விக்னேஸ்வரன் அறிக்கை

Next Post
வடக்கு மாகாணசபையின் அமைச்சு விடயத்தில் அய்யூப் அஸ்மின் உள்ளிட்டவர்களிற்கு இடமில்லை – முதலமைச்சர்

அரசாங்க தகவல் நிலையத்தின் தமிழ் மொழிக் கொலையை கண்டித்து நீதியரசர் விக்னேஸ்வரன் அறிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures