கடுவெல நீதவான் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ அறையை சீல் வைக்க நீதிச் சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
கடுவெல நீதவானாக இருந்த வனிமா விஜேபண்டார தொடர்பாக ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சீல் வைக்கப்பட்ட நீதவானின் உத்தியோகபூர்வ அறைக்கு காவல்துறை பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட உடைமைகள்
அத்துடன், அடுத்த திங்கட்கிழமை நீதிமன்றத்திற்கு வந்து தனது தனிப்பட்ட உடைமைகளை உத்தியோகபூர்வ அறையிலிருந்து எடுத்துச் செல்லவும் நீதவானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடுவெல நீதவான் நீதிமன்றத்தின் பணிகளை இடைநிறுத்தவும் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.