Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடல்நீர் நிலப்பகுதிக்கு வந்தமையால் மக்கள் மத்தியில் சுனாமி அச்சம்

April 23, 2018
in News, Politics, World
0

இலங்கையின் கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக கடல்நீர் நிலப்பரப்பிற்குள் வரும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டிருந்தது.தென்னிலங்கையின் சில பகுதிகளில் கடல்நீர் நிலப்பகுதிக்கு வந்தமையால் மக்கள் மத்தியில் சுனாமி அச்சம் ஏற்பட்டது.

எனினும் இது குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், தென் மற்றும் தென் கிழக்கு கடற்பரப்பில் சுமார் மூன்று மீற்றருக்கும் மேலாக கடல் அலைகள் எழும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கொந்தளிப்பு தொடர்பில் தேவையற்ற ரீதியில் அச்சம் கொள்ள வேண்டாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையை சூழவுள்ள வளிமண்டவியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையே கடல் கொந்தளிப்புக்கு காரணமாகும்.

காலநிலை மாற்றம் காரணமாக புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழ் கடல் பிரதேசங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்பட கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் இதனால் ஆபத்துக்கள் ஏற்படும் என அச்சமடைய தேவையில்லை என பொது மக்களிடம் திணைக்களம் கேட்டுகொண்டுள்ளது.

Previous Post

பால் மா 75 ரூபா, சமையல் எரிவாயு 245 ரூபா அதிகரிப்பு

Next Post

முல்லைத்தீவு கடற்கரையில் விசித்திரமான சங்கு

Next Post

முல்லைத்தீவு கடற்கரையில் விசித்திரமான சங்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures