திக்வெல்ல – பெஹெம்பிய பகுதியில், கடலில் நீராடச்சென்று, நீரோட்டத்தில் அடித்துச்செல்லப்பட்ட இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை (19) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடற்கரையில் பணியில் இருந்த திக்வெல்ல பொலிஸ் உயிர்க்காக்கும் பிரிவின் அதிகாரிகளால் அவர்கள் மீட்கப்பட்டு அடிப்படை முதலுதவி வழங்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டவர்கள் 26 மற்றும் 27 வயதுடைய ஆண் மற்றும் பெண் எனவும் ஹொங்கொங் நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

