Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடற்கரைகளிலும் , பொது இடங்களிலும் ஒன்று கூடுவதை தவிர்த்து கொள்ளுமாறு கோரிக்கை

May 23, 2020
in News, Politics, World
0

பொதுமக்கள் கடற்கரைகளிலும் அல்லது பொது இடங்களிலும் ஒன்று கூடுவதை ரமழான் பெருநாளில் தவிர்த்து கொள்ளுமாறு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பான அம்பாறை மாவட்டத்தின் நிலவரம் குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்று சனிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற நிலையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எதிர்வரும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு நாங்கள் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன் இன்றுவரை நாங்கள் இந்த கொவிட் 19 உரிய கட்டுப்பாட்டை இலங்கையில் மிகவும் சிறப்பாக செய்து அதை மிகுந்த கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றோம் அந்த விதத்தில் நாங்கள் விடயங்களை உடைத்து விடுபவர்களாக இருக்கக் கூடாது. பள்ளிவாசல்கள் ஊடாக உறுதிமொழியை தந்திருக்கின்றார்கள் ரமழான் கால ஒன்றுகூடலை தவிப்பதாக அத்துடன் பொதுமக்கள் கடற்கரைகளிலும் அல்லது பொது இடங்களிலும் ஒன்று கூடுவதை நிச்சயமாக கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வெளிமாவட்டத்தில் இருந்து வந்தவர்கள் இருப்பார்கள் தொற்று நோய் பரவக்கூடிய ஏதுவாக வர்கள் இருப்பார்கள் ஆகவே நிச்சயமாக இந்த ஒன்றுகூடலில் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற விடயத்தை சுகாதாரத்துறையினர் நாம் தெரிவிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம் பொலிஸாரும் அவரது நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள் என்றார்.

கடந்த வியாழக்கிழமை அம்பாறை மாவட்டம் காஞ்சிரங்குடா இராணுவ முகாமிலிருந்து நோய்வாய்ப்பட்டு இறந்ததாக ஒரு ராணுவ வீரரை திருக்கோயில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வந்திருந்தார்கள் அந்த ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வந்த தருணத்தில் இராணுவத்தினரால் கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மூச்சுவிட சிரமப்பட்டு இருந்ததாகவும் நெஞ்சுக்கு பிரச்சினையை காணப்பட்டதாகவும் வைத்திய சாலைக்கு இறந்த நிலையில் கொண்டுவரப்பட்டதை உறுதிப்படுத்தி இருந்தனர்.

எனினும் உண்மையில் அந்த இராணுவ வீரருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டு மரணம் சம்பவித்திருக்கலாம் என எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அந்த இராணுவ வீரரின் உடலை நாங்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் பத்திரப்படுத்தி மருத்துவ ஆய்விற்காக மாதிரிகளை உரிய பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருந்தோம் .

அந்த அறிக்கையின் அடிப்படையில் இறந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவு கிடைத்தது அதனைத் தொடர்ந்து அங்கு காணப்பட்ட பதற்ற நிலைமைக்கு தெளிவு பிறந்திருக்கிறது.

மேலும் இறந்த இராணுவ வீரர் கொரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த காலங்களில் சேவையாற்றியவர் எனவும் அதற்காக அவருக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டார்

Previous Post

ஊரடங்கு சட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு

Next Post

யாழ். உரும்பிராயில் இராணுவத்தை தாக்கிய மூவர் கைது !

Next Post

யாழ். உரும்பிராயில் இராணுவத்தை தாக்கிய மூவர் கைது !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures