Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடன் வாங்க வேண்டிய நிலையில் அநுர அரசாங்கம் : பொருளியல் பேராசிரியர் பகிரங்கம்

November 5, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பாதீட்டுப் பற்றாக்குறையை படிப்படியாகக் குறைத்தாலும், கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த ஆண்டில் அரசாங்கம் அதிக கடன் வாங்கியதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த அரசாங்கம் கடன்களைப் பெறுவது பெரும்பாலும் உள்நாட்டு மூலங்களிலிருந்தே ஆகும்.

வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறை

இதற்குக் காரணம், கடன் நெருக்கடியால் வெளிநாட்டு நிதிச் சந்தைகளுக்கோ அல்லது இருதரப்புக் கடன் வழங்குநர்களிடமிருந்தோ கடன்களைப் பெறும் திறன் மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளது.

கடன் வாங்க வேண்டிய நிலையில் அநுர அரசாங்கம் : பொருளியல் பேராசிரியர் பகிரங்கம் | Anura Government Is In A Position To Borrow Money

பலதரப்பு நிறுவனங்கள் கூட முன்பைவிட குறைந்த சலுகை வட்டிக் கடன்களையே இப்போது வழங்குகின்றன. வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறை நிலவும் நிலையில், அரசாங்கம் கட்டாயம் கடன் வாங்க வேண்டியுள்ளது.

இந்த அரசாங்கத்தின் கீழ் அதிக கடன் வாங்கியதாக நான் காணவில்லை. ஏனெனில், பாதீட்டுப் பற்றாக்குறை படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதேபோல், 2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் கடன் இலக்குகளைப் பார்க்கும்போது, கடன்களைக் குறைப்பதையே அது காட்டுகிறது.

எனவே, குறுகிய காலப்பகுதியில் அதிக கடன் வாங்கிய அரசாங்கம் இது என்று ஒரு அறிக்கைக்குத் தேவையான ஆதாரங்களை எங்களால் வழங்க முடியும் என்று நான் நம்பவில்லை“ என தெரிவித்துள்ளார். 

Previous Post

மாவீரர் நாள் அனுஷ்டிப்பு விவகாரம் – சிறீதரன் எம்.பியின் சாரதிக்கு பிணை

Next Post

புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!

Next Post
புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!

புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை - சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures