Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடத்தி செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகள் மீட்பு

September 5, 2020
in News, Politics, World
0

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமோட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்தி செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை பூவரசங்குளம் விசேட அதிரடிபடையினர் மீட்டுள்ளனர்.

பாலமோட்டை பகுதியில் முதிரைமரங்கள் கடத்தப்படவுள்ளதாக பூவரசங்குளம் விசேட அதிரடிபடையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து இன்று அதிகாலை குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற இரண்டு வாகனங்களை வழி மறித்துள்ளனர்.

எனினும் வாகனம் நிறுத்தாமல் சென்றதால் அதனை திரத்திச்சென்று தடையை (கல்ரொப்ஸ்) ஏற்படுத்தினர். இதனால் நிலைகுலைந்த சாரதிகள் வாகனங்களை வீதியில் நிறுத்தி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான 18 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றை கடத்திச்செல்ல பயன்பட்ட இரண்டு கப் ரக வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றபட்ட முதிரை குற்றிகளை வனவளத்திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க உள்ளதாக விசேட அதிரடிபடையினர் தெரிவித்தனர்.

Previous Post

சமூக வலைதளங்களின் மூலம் பண மோசடி

Next Post

இனநல்லுறவை வலியுறுத்தும் நடைபயணம் வவுனியாவை வந்தடைந்தது

Next Post

இனநல்லுறவை வலியுறுத்தும் நடைபயணம் வவுனியாவை வந்தடைந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures