கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கூட்டணியினர் சிங்கள கட்சிகள் வடக்கு கிழக்கு ஆளக்கூடாது, சிங்களவர்களுக்கு வாக்களிக்க கூடாது என்று கூறிவிட்டு தற்போது நீங்கள் செய்யும் வேலை சரியா என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது காரியாலயத்தில் வியாழக்கிழமை (12.06.2025) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இரா.சாணக்கியன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியோடும், தேசிய மக்கள் சக்தியினோடும் (NPP) இணைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரத்தை (ஜனா) முடிந்தால் உங்கள் கட்சியின் இருந்து நீக்கி காட்டுங்கள் செல்வம் அடைக்கலநாதனுக்கு சவால் விடுகின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்த கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணுங்கள்…