Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கஜா புயல் பாதிப்பு: இதுவரை 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்

November 16, 2018
in News, Politics, World
0

அதிகாலை கரையை கடந்த கஜா புயல் தமிழகத்தில் பலத்த சேதத்த ஏற்படுத்தி உள்ள நிலையில், புயல் காரணமாக 8 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிகாலை 2.30 மணி அளவில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கரையை கடந்த கஜா புயல் அந்த மாவட்டத்தை சூறையாடி சின்னபின்னமாக்கி சென்றுள்ளது. சுமார் 120 கி.மீ வேகத்தில் சூறாவளி மற்றும் கனமழையுடன் கரையை கடந்த புயல் காரணமாக ஆயிரக்கணக்கான ஏராளமான மரங்கள், நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள், செல்போன் கோபுரங்கள் என பயங்கர சேதங்களை ஏற்படுத்தி உள்ளது.

கஜா புயலின் தாக்கும் இன்னும் தொடர்ந்து வருகிறது. மழை மற்றும் காற்று தொடர்ந்து வருகிறது. மேலும் சில மணி நேரம் புயலின் தாக்கம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.‘

இந்த நிலையில் பட்டுக்கோட்டை சிவக்கொல்லையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ரமேஷ், சதீஷ், அய்யாதுரை, தினேஷ் ஆகிய 4 பேர் பலியாகி உள்ளனர். இது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், தஞ்சை மாவட்டம் அதிராமப்பட்டினத்தில் வீடு இடிந்து பெண் குழந்தை ஒன்று பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதுபோல, கடலூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து, வீட்டிற்குள் இருந்த பெண் ஒருவர் பலியானார். இவரின் கணவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மின்சாரம் தாக்கி ஆனந்த் என்பவர் உயிரிழந்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் வடமணப்பாக்கத்தில் வீட்டின் சுவர இடிந்து விழுந்த தில் 7 வயது சிறுமி ப்ரியாமணி பலியானார்., மேலும் 4 பேர் படுகாயத்துடன் செய்யார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கஜா புயலின் கோர தாண்டவம் காரணமாக இதுவரை 8 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..இது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கஜா புயல் காரணமாக பல இடங்களில் வீடுகள் இடிந்து உள்ளது. மேலும் மின்சார இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளும் மெதுவாகவே நடைபெற்று வருகின்றன.

நிறைய இடங்களில் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்து இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Previous Post

ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு! இன்று நாடாளுமன்றத்தில் என்ன நடக்கும்?

Next Post

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி முன்னெடுக்கப்படும்

Next Post

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி முன்னெடுக்கப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures