Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Health

ஒலி நரம்பு மண்டலப் பாதிப்பின் காரணமாக ஏற்படும் காது கேளாமைக்குரிய நவீன சிகிச்சை

July 9, 2022
in Health, News
0
ஒலி நரம்பு மண்டலப் பாதிப்பின் காரணமாக ஏற்படும் காது கேளாமைக்குரிய நவீன சிகிச்சை

எம்மில் சிலருக்கு அரிதாக மரபணு குறைபாட்டின் காரணமாகவும், வேறு சிலருக்கு காதில் உள்ள ஒலி நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பின் காரணமாகவும், கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படும். இதற்கு தற்போது ஸ்டீரியோடாக்டிக் ரேடியோசர்ஜேரி எனும் கதிரியக்க சிகிச்சை பலனளித்து வருவதாக மருத்துவர் நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

எம்மில் சிலருக்கு கேட்கும் திறனின் பாதிப்பு ஏற்பட்டாலோ… காதில் எப்போதும் ரீங்காரமிடும் ஒலி கேட்பது போன்ற உணர்வு இருந்தாலோ அல்லது நிற்கும்போதோ… நடக்கும் போதோ… சமநிலை தவறி தடுமாறினாலோ அல்லது முகத்தில் உள்ள தசைகளின் இயக்கத்தில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டாலோ உங்களுடைய இரண்டு காதுகளில் ஏதோ ஒரு காதில் உள்ள ஒலி நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 

இதற்கு மருத்துவ மொழியில் வெஸ்டிபுலர் ஸ்க்வான்நோமா என்றும், அக்வாஸ்டிக் நியுரோமா என்றும் குறிப்பிடுவார்கள். இது காது பகுதியிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்பு மண்டல பகுதியில் புற்றுநோய் அல்லாத கட்டிகள் உருவாகி இருக்கிறது என்று பொருள். 

மூளைக்கு செல்லும் இந்த ஒலி நரம்புகளின் கிளைகளில் அழுத்தம் ஏற்பட்டால்… காது கேளாமை பாதிப்பு ஏற்படும். வேறு சிலருக்கு காதில் வித்தியாசமான ஒலி  கேட்டுக் கொண்டேயிருக்கும். நிற்பதற்கும், நடப்பதற்கும் சமநிலை தவறி.., நிலையற்ற தன்மையையும் உண்டாக்கும்.

பெரும்பாலானவர்களுக்கு இந்த பாதிப்பு அதாவது நரம்பு மண்டலத்தில் உண்டாகும் கட்டி மெதுவான வளர்ச்சியையே பெறும். வெகு சிலருக்கு மட்டுமே இவை வேகமாக வளர்ச்சி அடைந்து, மூளை பகுதிக்கு அழுத்தத்தை உண்டாக்கி, மூளையின் செயல்பாட்டில் குறுக்கீடு செய்து பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

இத்தகைய பாதிப்புடன் இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் ஓடியோமெட்ரி எனப்படும் வழக்கமான பரிசோதனையுடன், எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்துவார்கள். 

அதன் பிறகு காதின் உட்பகுதியில் உண்டாகி இருக்கும் கட்டியின் அளவைப் பொறுத்து சிகிச்சையை மேற்கொள்வார்கள். கட்டி 2.5 மில்லி மீற்றர் அளவிற்கு இருந்தால்.., அதனை சத்திர சிகிச்சையின் மூலமாகவோ அல்லது ரேடியேசன் தெரபி எனப்படும் கதிரியக்க சிகிச்சை மூலமாகவோ சிகிச்சை அளித்து முதன்மையான முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள்.

சிலருக்கு அவர்களின் உடலில் உள்ள இணை நோய்களின் காரணமாக இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு ஸ்டீரியோடாக்டிக் ரேடியோசர்ஜேரி எனும் கதிரியக்க சிகிச்சையை மேற்கொண்டு முழுமையான நிவாரணத்தை வழங்குவர். வேறு சிலருக்கு புரோட்டான் பீம் தெரபி எனும் நவீன சிகிச்சையையும் வழங்கி நிவாரணத்தை அளிப்பர்.

டொக்டர் வேணுகோபால்
தொகுப்பு அனுஷா.

Previous Post

‘பொன்னியின் செல்வன்’ டீசர் வெளியீடு

Next Post

போராட்டகாரர்களின் கட்டுப்பாட்டில் வந்த ஜனாதிபதியின் மாளிகை – கொழும்பில் பதற்றம்

Next Post
போராட்டகாரர்களின் கட்டுப்பாட்டில் வந்த ஜனாதிபதியின் மாளிகை – கொழும்பில் பதற்றம்

போராட்டகாரர்களின் கட்டுப்பாட்டில் வந்த ஜனாதிபதியின் மாளிகை - கொழும்பில் பதற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures