Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஒலிம்பிக்கில் வீரர்களுக்கு அச்சுறுத்தலாகியுள்ள உளவியல் பிரச்சினைகள்…!

July 29, 2021
in News, Sports
0
ஆரவாரமற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா : இன்றுமுதல் பதக்க வேட்டை ; நம்மவர்களும் களத்தில்

டோக்கியோ ஒலிம்பிக்கில் தனிமைப்படுத்தல் மற்றும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இல்லாததோடு மைதானத்தில வீரர்களை உற்சாகப்படுத்த பார்வையாளர்களும் இல்லாத காரணத்தினால் விளையாட்டு வீரர்களின் மன ஆரோக்கியத்தை பாதித்துள்ளமையை பல நாட்டு வீரர்களம் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதில் வீரர் உலகளாவிய விளையாட்டு அரங்கில் தங்கள் நாட்டின் நம்பிக்கையை சுமந்து கொண்டு தொற்றுநோயால் ஏற்படும் சவால்களை சமாளிக்க போராடி வருகின்றனர்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஜிம்னாஸ்டிக்ஸ் குழு நிகழ்விலிருந்து சிமோன் பைல்ஸ் அதிர்ச்சி தரும் வகையில் வெளியேறிய பிறகு, உலகின் பாரத்தை தன் தோள்களில் சுமந்து கொண்டிருப்பதாக உணர்ந்ததாக  கூறினார். கொரோனா தொற்றுநோயுடன் பிணைக்கப்பட்ட ஒரு வருட காலம், இழப்பு மற்றும் கட்டுப்பாடுகளால் அந்தச் சுமை அதிகரித்ததாகத் தெரிவித்தார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் எந்தவொரு வீரருக்கும் அவர்களின் குடும்பத்தினர் நண்பர்கள் டோக்கியோவில் விளைாட்டரங்கிற்கு வந்து அவர்களை உற்சாகப்படுத்த முடியாது, அத்தோடு வீரர்களின் போட்டிகள் தவிர்ந்த அனைத்து நடவடிக்கைகளும் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

டோக்கியோவுக்கு வருவதற்கு முன்பே, விளையாட்டு வீரர்கள் தொற்றுநோயுடன் தொடர்புடைய புதிய மற்றும் அறிமுகமில்லாத அழுத்தங்களை எதிர்கொண்டனர். அவர்கள் லொக்டவுன் காலத்தின்போது பயிற்சியளிப்பதற்கான வழிகளைக் கண்டுபிடித்து, உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வுக்கு தகுதிபெற வேண்டியிருந்தது.

இதில் ஜிம்னானஸ்டிக் போடடியில் தங்கப்பதக்கம் வென்ற ரஷ்ய வீராங்கனை ஏஞ்சலினா மெல்னிகோவா கூறுகையில்,  இது மிகவும் கடினமான பாதையாகும். தொற்றுநோய் காரணமாக விளையாட்டு ஒத்திவைக்கப்பட்டது என்று நாங்கள் அறிந்ததும், எங்கள் பயிற்சி தளம் மூடப்பட்டது. நாங்கள் ஒன்றரை வருடங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தோம் என்று தெரிவித்தார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான தீர்மானமிக்க போட்டி இன்று

Next Post

132 நாடுகளில் உருமாறிய டெல்டா கொரோனா வைரஸ்

Next Post
அல்பா கொவிட் திரிபுடன் 10 பேர் அடையாளம்

132 நாடுகளில் உருமாறிய டெல்டா கொரோனா வைரஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures