Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

ஒலிக்கலவைப் பொறியாளராக நடித்திருக்கும் சசிகுமார்

November 17, 2022
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
ஒலிக்கலவைப் பொறியாளராக நடித்திருக்கும் சசிகுமார்

‘கிராமத்து நாயகன்’ நடிகர் சசிகுமார் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘நான் மிருகமாய் மாற’ எனும் படத்தில் அவர் ஒலிக்கலவை பொறியாளர் வேடத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

‘கழுகு’, ‘சவாலே சமாளி’, ‘சிவப்பு’, ‘கழுகு 2’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் சத்ய சிவா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘நான் மிருகமாய் மாற’.

இந்தப் படத்தில் கிராமத்து நாயகனான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை ஹரிப்பிரியா நடித்திருக்கிறார்.

இவர்களுடன் விக்ராந்த், மதுசூதன ராவ், அப்பானி சரத், கே. எஸ். ஜி. வெங்கடேஷ், துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ராஜா பட்டச்சார்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை செந்தூர் ஃபிலிம் இண்டர்நேஷனல் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி. டி. ராஜா மற்றும் டி. ஆர். சஞ்சய் குமார் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” எளிய மனிதன் ஒருவன் மிருகமாக மாறினால்.. என்பதை அடிப்படையாக வைத்து படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. சாதாரண மனிதனுக்கு இந்த சமூகம் அளிக்க வேண்டிய பாதுகாப்பு அளிக்காமல், துரோகம் செய்தால், அந்த மனிதன் பாதிக்கப்பட்டு எம்மாதிரியான முடிவுகளை மேற்கொள்கிறான் என்பதை திரைக்கதையாக விவரித்திருக்கிறோம். இதில் நாயகன் சசிகுமார் முதன் முதலாக கிராமிய பின்னணியில் இருந்து மாறுபட்டு நகரவாசியாக நடித்திருக்கிறார்.

அதிலும் இசை தொடர்பான பணிகளில் ஒன்றான ஒலிக் கலவை பொறியாளராக நடித்திருக்கிறார். இதனால் இப்படத்திற்கு பின்னணியிசை புதுமையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக இசையமைப்பாளர் ஜிப்ரான் கடுமையாக உழைத்து இசைக்கருவிகளின் ஒலிகளல்லாமல், இயற்கையில் எழும் ஒலிகளை ஒருங்கிணைத்து பின்னணியிசையாக இணைத்திருக்கிறார். இது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும். இதில் நாயகன் சசிகுமார் ஆக்சன் காட்சி ஒன்றில் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கி படக்குழுவினரை உற்சாகப்படுத்திப்படுத்தினார்.

இப்படத்தின் கதாநாயகிக்கு ஆறு வயதில் ஒரு குழந்தை உண்டு. வழக்கமான நாயகியாக இல்லாமல் அழுத்தமான வேடத்தில் நடிகை ஹரிப்பிரியா நடித்திருக்கிறார். ” என்றார்.

சசிகுமார் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘நான் மிருகமாய் மாற’ இம்மாதம் 18 ஆம் திகதியன்று உலகம் முழுதும் பட மாளிகையில் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் 25 ஆம் திகதியன்று அவர் நடிப்பில் தயாரான “காரி’ எனும் திரைப்படமும் வெளியாகிறது. அடுத்தடுத்த வாரங்களில் சசிக்குமாரின் படங்கள் தொடர்ச்சியாக வெளியாவதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்

Previous Post

எழுத்தாளர் ஜெயமோகனின் ‘ரத்தசாட்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Next Post

முகம் புத்துணர்ச்சிக்கு சில டிப்ஸ்

Next Post
முகம் புத்துணர்ச்சிக்கு சில டிப்ஸ்

முகம் புத்துணர்ச்சிக்கு சில டிப்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures