Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஒரு சிக்ஸர் கூட அடிக்காத போட்டியாக இந்திய- நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டி!

January 30, 2023
in News, Sports, முக்கிய செய்திகள்
0
ஒரு சிக்ஸர் கூட அடிக்காத போட்டியாக இந்திய- நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டி!

சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் அரங்கில் அதிக பந்துகள் விளையாடி ஒரு சிக்ஸர் கூட அடிக்காத போட்டியாக இந்திய- நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டி அமைந்தது.

இதற்கு முன்னர், நியூஸிலாந்து- பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் 2021 ஆம் ஆண்டு மிர்பூரில் நடைபெற்ற சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் 238 பந்துகள் விளையாடி ஒரு சிக்கஸர்கூட விட்டுக்கொடுக்கப்பாடாதமையே முன்னைய பதிவாக இருந்தது.

இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற (29) போட்டியில் இந்திய மற்றும் நியூஸிலாந்து ஆகிய இரண்டு அணிகளு மே ஒரு சிக்ஸரைக் கூட அடிக்காதமை கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 98 ஓட்டங்களைப் பெற்றது. இதில் நியூஸிலாந்து 6 பவுண்டரிகளை மாத்திரமே அடித்திருந்தது.

99 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இந்தியா இலகுவாக எடுத்து வெற்றியீட்டும் என பலரும் எண்ணியிருந்தபோதிலும், ‍வெற்றி இலக்கை 19.5 ஓவர்களிலேயே எட்டியிருந்தது. இதன்படி இந்தியா 4 விக்கெட்டுக்களை இழந்து 101 பெற்று 6 விக்கெட்டுக்களால் இத்தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்து ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் சமப்படுத்தியுள்ளது. இந்தியா சார்பில் 8 பவுண்டரிகள் அடிக்கப்பட்டபோதிலும், ஒரு சிக்ஸர்கூட விளாசப்படவில்லை.

இப்போட்டியில் ஆடுகளத்தன்மையானது, பந்துவீச்சுக்கு சாதமாக இருந்தது. குறிப்பாக சுழற் பந்துவீச்சுக்கு அதிக சாதக தன்மை வாய்ந்ததாக இருந்ததாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். இப்போட்டியில் மொத்தமாக வீசப்பட்ட 39.5 ஓவர்களில் 30 ஓவர்களை சுழற்பந்துவீச்சாளர்கள் வீசியிருந்தமை கவனிக்கத்தக்க அம்சமாகும்.

Previous Post

குடியரசு தினத்தில் ‘மேட் இன் இந்தியா’ ஆயுதங்கள்

Next Post

பெப்ரவரி 20 ஆம் திகதி தபால் மூல வாக்கெடுப்பு ஆரம்பம்

Next Post
18 வயதை பூர்த்தியடைந்தவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

பெப்ரவரி 20 ஆம் திகதி தபால் மூல வாக்கெடுப்பு ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures