Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஒரு கிலோ நெல்லுக்கு 100 ரூபா உத்தரவாத விலை வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

February 13, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஒரு கிலோ நெல்லுக்கு 100 ரூபா உத்தரவாத விலை வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஒரு கிலோ நெல்லை அரசாங்கத்தின் ஊடாக நூறு ரூபா வீதம் உத்தரவாத விலையில் கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு உணவு வழங்கக்கூடிய மாகாணமாக வட மாகாணமும் யாழ்ப்பாண மாவட்டமும் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பரந்தன் வயல்வெளியில் இன்று (12) நடைபெற்ற வடக்கு நெல் அறுவடை செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

பரந்தன் வயல்வெளிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அங்குள்ள விவசாயிகளிடம் நெற்செய்கை தொடர்பான பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டதுடன், அப்பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதி மேலும் கூறியதாவது:

விவசாயிகளுக்கு தேவையான உரங்களை அரசாங்கம் துரிதமாக வழங்கியது. எனவே, இம்முறை பெரும்போகத்தில் மேலதிக நெல் அறுவடை கிடைக்கும் என நம்புகிறோம். அதற்கமைய ஒரு கிலோ நெல்லை 100 ரூபா உத்தரவாத விலைக்கு அரசாங்கத்தின் ஊடாக கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்று பலர் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகின்றனர். விளைச்சல் அதிகரித்தாலும் அரிசி வாங்குவதற்கு பொருளாதார பலம் இல்லாத பிரிவினர் உள்ளனர்.

எனவே, மார்ச், ஏப்ரல் மாதங்களில் இருபது இலட்சம் குடும்பங்களுக்கு 10 கிலோ கிராம் அரிசியை இலவசமாக வழங்கும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம்.

சிங்கள,-தமிழ் புத்தாண்டு காலப்பகுதியாகும் போது அவர்களுக்கு 20 கிலோ அரிசி கிடைத்திருக்கும்.

தற்போது ஒரு ஹெக்டேயருக்கு சுமார் 3 மெட்ரிக் தொன் நெல் அறுவடை கிடைக்கிறது. நாம் செயல்படுத்தி வரும் விவசாயத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் மூலம் ஒரு ஹெக்டேயருக்கு குறைந்தது ஆறு மெட்ரிக் தொன் அறுவடை பெற வேண்டும். முடியுமானால், அதனை 7 மெட்ரிக் தொன்களாக உயர்த்த எதிர்பார்க்கிறோம்.

அந்த முன்னேற்றத்தை அடைய தேவையான வசதிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

நெல் கொள்முதல் செய்து சேமித்து வைக்கும் முறைகள் பின்னர் உருவாக்கப்படும். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலைகளை நிறுவ எதிர்பார்க்கிறோம். அடுத்த இரண்டு வருடங்களில் அந்த செயற்பாடுகளை நிறைவு செய்ய முடியும். இப்பகுதிக்கு தேவையான நீர் வசதிகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

பூநகரி ஏரியை மீளப் புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இரணைமடு ஏரி தற்போது தயார் செய்யப்பட்டுள்ளது.

Previous Post

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இலகுவான வெற்றிகள்

Next Post

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு வரி விதிக்குமாறு கோரிக்கை

Next Post
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு வரி விதிக்குமாறு கோரிக்கை

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு வரி விதிக்குமாறு கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures