ரத்மலான பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள சீனி கொள்கலனில் இருந்து மீட்கப்பட்ட 320 கோடி ரூபா பெறுமதியான கொக்கேன் ரக போதைப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, ஒருகொடவத்தை சுங்கப் பகுதியில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சீனி கொள்கலன்கள் 54 இற்கு பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு சீல் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சீனி கொள்கலன்கள் பிரேஸிலில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இவை கடுமையான சோதனைக்குட்படுத்தப்படாமல் மீண்டும் கையளிக்கப்படாது எனவும் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு இலங்கை சுங்கத்திடம் அறிவித்தல் வழங்கியுள்ளது