இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்குள்ளானவர்களில் ஒரு வயதும் 5 மாதங்களுமான குழந்தையும் உள்ளடங்குகின்றது எனச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தக் குழந்தையின் தாய்க்கும்கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் தந்தைக்கும் கொரோனா தொற்றியுள்ளதா எனப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவர்கள் இத்தாலியில் இருந்து வருகை தந்தவர்களாவர்.
இவர்கள் மூவரும் கொழும்பு அங்கொட தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நேற்றிரவு வரையில் 43ஆக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

