இந்திய பார்லிமென்ட் தேர்தலின் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு இன்று(ஏப்., 18) நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறும் ஓட்டுப்பதிவில் காலை முதலே சினிமா பிரபலங்கள் பலர் வாக்களித்தனர்.
சிவகுமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, அர்ஜுன், அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஜய் ஆண்டனி, விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக், நாசர், கருணாஸ், முருகதாஸ், குஷ்பு, மீனா, ஜோதிகா, ஏ.ஆர்.ரஹ்மான், பாபி சிம்ஹா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் ஓட்டளித்தனர்.
அதேசமயம் சிலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாத காரணத்தால் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து திரும்பினர்.
நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரமேஷ் கண்ணா, ரோபோ சங்கர் ஆகியோரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை. இது குறித்து நடிகர் ரமேஷ் கண்ணா தனது கண்டனத்தை வீடியோவாக வெளியிட்டு பதிவு செய்துள்ளார்.

