Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.நா மனித உரிமை பேரவையின் 39வது அமர்வு: இலங்கை குறித்த இரு அறிக்கைகள் விவாதம்

August 16, 2018
in News, Politics, World
0

செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 39வது அமர்வில் இலங்கை குறித்த இரு அறிக்கைகள் விவாதிக்கப்படவுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 39 வது அமர்வு எதிர்வரும் செப்டம்பர் 10 ம் திகதி முதல் 28 வரை ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது.இந்த அமர்வில் கண்மூடித்தனமாக தடுத்துவைத்தல் தொடர்பான ஐநா செயற்குழு தனது இலங்கை விஜயம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது.

இதேபோன்று உண்மை நீதியை ஊக்குவித்தல் மீளநிகழாமை தொடர்பான ஐக்கியநாடுகளின் விசேட அறிக்கைiயாளரும் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.

இந்த இரு அறிக்கைகளையும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை ஆராயவுள்ளது.

இலங்கைக்கு கடந்த வருடம் விஜயம் மேற்கொண்ட கண்மூடித்தனமாக தடுத்துவைத்தல் தொடர்பான ஐநா செயற்குழு இலங்கை நிலவரம் தொடர்பில் கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட சுதந்திரத்திற்கான உரிமையை இலங்கையின் பாதுகாப்பு தரப்பினரும் நீதித்துறையினரும் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளும் மதிக்கவில்லை என செயற்குழு குற்றம்சாட்டியிருந்தது.

Previous Post

வாஜ்பாய் மறைவு: மத்திய அரசு 7 நாள் துக்கம் அனுசரிப்பு

Next Post

குமார் சங்கக்கார வெளியிட்டுள்ள அதிரடி கருத்து

Next Post

குமார் சங்கக்கார வெளியிட்டுள்ள அதிரடி கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures