ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம் நிறைவடைவதற்கு முன்னர் அறிவிக்கப்படுவார் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சில தினங்களில் ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுக் கூட்டணியை அமைக்கும் சகல தீர்மானங்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சிகள் நேற்று அலரிமாளிகையில் முக்கிய சந்திப்பொன்றில் ஈடுபட்டன. இது குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி பக்கம் நின்ற அனைவரதும் ஆதரவு எமக்கு இம்முறை கிடைக்கும். ஆகவே அதனை மேலும் பலப்படுத்தி பரந்த கூட்டணியாக எவ்வாறு பயணிப்பது என்ற விடயமே இச்சந்திப்பில் பேசப்பட்டது.
ஜனாதிபதி வேட்பாளர் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும். கட்சியின் தலைவர் உபதலைவர்கள் மற்றும் பங்காளிக்கட்சிகளின் பூரண ஒத்துழைப்பில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

