Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண லீக் சுற்று: இந்தியாவில் 17 போட்டிகள், இலங்கையில் 11 போட்டிகள்

June 16, 2025
in News, Sports, முக்கிய செய்திகள்
0
ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் அடுத்த வருடம் லண்டனில்

சர்வதேச மகளிர் கிரிக்கட் அரங்கில் உயரிதும் உன்னதம் வாய்ந்ததுமான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 13ஆவது அத்தியாயம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பெங்களூருவில் செப்டெம்பர் 30ஆம் திகதி நடைபெறவுள்ள ஆரம்பப் போட்டியுடன் தொடங்கவுள்ளது.

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்குபற்றுவதன் காரணமாக இந்த வருட ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்தியாவிலும் இலங்கையிலும் நடத்த ஐசிசி தீர்மானித்துள்ளது. எனினும் இந்தப் போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடு என்ற தனி உரிமம் இந்தியாவுக்கே இருக்கிறது.

இந்த வருடம் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில்  நடப்பு சம்பியன்அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, இலங்கை ஆகிய எட்டு அணிகள் பங்குபற்றுகின்றன.

இந்த எட்டு அணிகளும் ஒரே குழுவில் ஒன்றையொன்று எதிர்த்தாடும் வகையில் மகளிர் உலகக் கிண்ணம் நடத்தப்படுவதால் இலங்கையில் 11 போட்டிகள் நடைபெறவுள்ளது.

இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் இந்தியாவை பெங்களூரிலும் 3ஆவது போட்டியில் இங்கிலாந்தை குவாட்டியிலும் சந்திக்கும்.

மற்றைய 5 அணிகளை  இலங்கை   தனது சொந்த மண்ணில் எதிர்த்தாடும்.

இதேவேளை, பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட ஏழு போட்டிகளும் கொழும்பில் நடைபெறும்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானும் இடையில் நிலவும் அரசியல் கொந்தளிப்பு காரணமாக இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் இரண்டு நாடுகளுக்கும் விஜயம் செய்வதில்லை என்பதில் விடாப்பிடியாக இருக்கின்றன. இதன் காரணமாகவே பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகளை கொழும்பில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை பாகிஸ்தான் அரை இறுதிக்கும் இறுதிப் போட்டிக்கும் முன்னேறினால் ஒரு அரை இறுதிப் போட்டியும் இறுதிப் போட்டியும் கொழும்பில் நடைபெறும். பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறினால் இறுதிச் சுற்று யாவும் இந்தியாவில் நடைபெறும்.

இலங்கையின் போட்டிகள்

செப். 30 – எதிர் இந்தியா – பெங்களூரு

அக். 04 – எதிர் அவுஸ்திரேலியா – கொழும்பு

அக். 11 – எதிர் இங்கிலாந்து – குவாஹாட்டி

அக். 14 – எதிர் நியூஸிலாந்து – கொழும்பு

அக். 17 – எதிர் தென் ஆபிரிக்கா – கொழும்பு

அக். 20 – எதிர் பங்களாதேஷ் – கொழும்பு

அக். 24 – எதிர் பாகிஸ்தான் – கொழும்பு

முழு அட்டவணை (Full Schedule)

Previous Post

சர்வதேச வர்த்தக போர் காரணமாக இலங்கையின் ஏற்றுமதி தொழில்துறைக்கு பெரும் பாதிப்பு – ஐ.நா எச்சரிக்கை

Next Post

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்ட உத்தியோகபூர்வ டெஸ்ட் குழாத்தில் 18 வீரர்கள்

Next Post
ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்ட உத்தியோகபூர்வ டெஸ்ட் குழாத்தில் 18 வீரர்கள்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்ட உத்தியோகபூர்வ டெஸ்ட் குழாத்தில் 18 வீரர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures