Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வரும் – மனோ கணேசன்

January 4, 2020
in News, Politics, World
0

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் இந்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் தெரி­வித்துள்ளார்.

எட்­டி­யாந்­தோட்டை டாக்டர்.என்.எம் பெரேரா மத்­திய கல்­லூரி மண்­ட­பத்தில் நடை­பெற்ற நாட்­டி­யாஞ்லி வைப­வத்தில் பிர­தம அதி­யாக கக­லந்­துக்­கொண்டு உரை­யாற்­றிய பொழுதே அவர் இவ்­வாறு கூறினார்.

எட்­டி­யாந்­தோட்ட பரத கலா­ல­யத்தின் பொறுப்­பா­சி­ரியை திரு­மதி அமூர்­தனி குலேந்­திரன் தலை­மையில் நடை­பெற்ற இந்­நி­கழ்வில் கேகாலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கே. சுஜித் சஞ்­ஜய பெரேரா, எட்­டி­யாந்­தோட்ட பிர­தேச சபை தலைவர் கே. டி .வசந்த, எட்­டி­யாந்­தோட்ட பிர­தேச சபையின் முன்னாள் உப தலை­வரும் எட்­டி­யாந்­தோட்ட இந்து மன்றம் மற்றும் ஸ்ரீ விநா­ய­கர்­ஆ­லய பரி­பா­லன சபை செய­லா­ள­ரு­மான சி.கே. முரு­கேசு , மலை­யக மக்கள் முன்­ன­ணியின் உப செய­லாளர் ஜி. ஜெக­நாதன் ஆகி­யோர் ­க­லந்­துக்­கொண்­டனர்.

மனோ கணேசன் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

நாட்டில் ஆட்சி மாற்­றங்கள் வரலாம். ஜனா­தி­ப­தி­களில் மாற்­றங்கள் வரலாம். ஆனால் மக்­களின் தேவை­களை அறிந்து ஆட்­சி­யா­ளர்கள் செயல்­பட வேண்டும்.

எட்­டி­யாந்­தோட்டை மண்ணின் மைந்தன் என்ற ரீதியில் நான் கூற­வி­ரும்­பு­வது இந்த எட்­டி­யாந்­தோட்டை மண்­ணுக்கு தனி சிறப்பு இருக்­கின்­றது.

இந்த மண்ணில் பிறந்­த­வர்கள் இன்று எத்­த­னையோ அர­சி­யல்­வா­திகள், எழுத்­தா­ளர்கள், கலை­ஞர்கள், கல்­வி­மான்கள் இருக்­கின்­றார்கள். இங்கு தமிழ், சிங்­களம், முஸ்­லீம்கள் ஒற்­று­மைக்கு எடுத்­து­காட்­டாக வாழ்ந்து வரு­கின்­றார்கள்.

இன்று இங்கு நடை­பெறும் நாட்­டி­யாஞ்­சலி நிகழ்­விலும் இந்து மாண­வி­க­ளுடன் பௌத்த மாண­வி­களும் பங்கு பற்­றி­யுள்­ளார்கள் இது ஒரு இன ஒற்­று­மைக்கு எடுத்­துக்­காட்­டாக இருக்­கின்­றது. எங்­க­ளது சிறப்பை புரிந்­துக்­கொண்ட சிங்­கள மாண­வி­களும் பங்கு பற்­றி­யி­ருப்­பது வர­வேற்­க­தக்­கது.

இந்து சம­யத்­திற்கும் பௌத்த சம­யத்­திற்கும் நெருங்­கிய ஒற்­றுமை இருக்­கின்­றது.பௌத்த ஆல­யங்­களில் இந்து தெய்­வங்­களின் சிலை­களும் இந்து ஆல­யங்­களில் புத்தர் சிலை­யையும் வைத்து மக்கள் வழிப்­பட்டு வரு­கின்­றனர்.

முதன் முறை­யாக எட்­டி­யாந்­தோட்­டையில் நடை­பெறும் பரத நாட்­டி­யாஞ்­சலி நிகழ்­வுகள் மிகவும் சிறப்­பாக இருக்கின்றது.

இதனை ஏற்பாடு செய்த பரத கலாலயம் ஆசிரியை திருமதி அமூர்தனி குலேந்திரனை பாராட்டுகின்றேன். இந்த பரத கலையை இங்கு மேலும் அபிவிருத்தி செய்வதற்கு நான் முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என கூறினார்.

Previous Post

சிங்கள பௌத்தர்களின் எதிர்பார்ப்புக்களை மீறி செயற்படப் போவதில்லை!

Next Post

தேர்தலில் போட்டியிடும் நோக்கம் தமக்கில்லை! இரா.சம்பந்தன்

Next Post

தேர்தலில் போட்டியிடும் நோக்கம் தமக்கில்லை! இரா.சம்பந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures