ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில், ஐக்கிய தேசிய கட்சியில் நிலவும் நெருக்கடி மற்றும் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் செயற்பட வேண்டிய முறைமை என்பன தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தமது பேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

