Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஏடன் வளைகுடாவில் 9 இந்திய மாலுமிகளுடன் சென்ற சரக்கு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

January 20, 2024
in News, World, முக்கிய செய்திகள்
0
ஏடன் வளைகுடாவில் 9 இந்திய மாலுமிகளுடன் சென்ற சரக்கு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

புதுடெல்லி: ஏடன் வளைகுடா பகுதியில் நேற்று முன்தினம் இரவு சென்ற சரக்கு கப்பல் மீதுஇ ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த கப்பலில் இருந்து வந்த அவசர அழைப்பையடுத்துஇ இந்திய கடற்படைக் கப்பல் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் உடனடியாக உதவிக்கு சென்றது.

அரபிக் கடல் ஏடன் வளைகுடா பெர்ஷியன் வளைகுடாஇ செங்கடல் பகுதிகளில் செல்லும் சரக்கு கப்பல்கள் சமீபகாலமாக டிரோன் தாக்குதலுக்கு ஆளாகின்றன. இந்த தாக்குதலில் ஹவுதி தீவிரவாதிகள் ஈடுபடுகின்றனர். இஸ்ரேலுக்கு செல்லும் அல்லது இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளின் கப்பல்கள் மீது இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ட்ரோன் தாக்குதல் மற்றும் கடற் கொள்ளையர்களை தடுக்கும் பணியில் இந்திய போர்க்கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் கடத்தப்பட்ட மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட பல கப்பல்களை இந்திய கடற்படை கப்பல்கள் மீட்டன.

இந்நிலையில் ஏடன் வளைகுடா பகுதியில் மார்ஷல் தீவுக்கு சொந்தமான ‘எம்.வி. ஜென்கோ பிகார்டி’ என்ற சரக்கு கப்பல் 22 மாலுமிகளுடன் சென்றது. இதில் 9 பேர் இந்தியர்கள். ஏடன் துறைமுகத்திலிருந்து 60 நாட்டிக்கல் மைல் தொலைவில் கப்பல் நேற்று முன்தினம் இரவு 11.11க்கு சென்று கொண்டிருந்தபோது அதன் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. உடனடியாக அந்த கப்பலில் இருந்து அவசர அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையடுத்து ஏடன் வளைகுடா பகுதியில் ரோந்து பணியில் இருந்த ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பல் உடனடியாக மீட்பு பணிக்கு விரைந்தது. நள்ளிரவு 12.20 மணியளவில் சரக்கு கப்பலை ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் இடைமறித்தது.

இந்திய கடற்படையின் வெடிகுண்டு நிபுணர்கள் சரக்கு கப்பலில் நேற்று காலை ஏறி டிரோன் தாக்குதலில் சேதமடைந்த பகுதியை ஆய்வு செய்தனர். மிக மோசமான பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்தபின்இ சரக்கு கப்பல் தொடர்ந்து பயணம் செய்ய வெடிகுண்டு நிபுணர்கள் அனுமதித்தனர். இதையடுத்து சரக்கு கப்பல் தனது பயணத்தை தொடர்ந்தது.

Previous Post

செங்கடல் ஊடாக பயணிக்கும் சீன ரஸ்ய கப்பல்களிற்கு எந்த ஆபத்தும் ஏற்படாது | ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்

Next Post

கல்விச் சுற்றுலாவின் போது படகு கவிழ்ந்ததில் இரு ஆசிரியர்களும் 14 மாணவர்களும் பலி | இந்தியாவில் சம்பவம்

Next Post
கல்விச் சுற்றுலாவின் போது படகு கவிழ்ந்ததில் இரு ஆசிரியர்களும் 14 மாணவர்களும் பலி | இந்தியாவில் சம்பவம்

கல்விச் சுற்றுலாவின் போது படகு கவிழ்ந்ததில் இரு ஆசிரியர்களும் 14 மாணவர்களும் பலி | இந்தியாவில் சம்பவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures