Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

எரிபொருளின் விலையை அதிகரிக்குமாறு இ.பெ.கூ மீண்டும் வலியுறுத்தல் | சுமித் விஜயசிங்க

February 16, 2022
in News, Sri Lanka News
0
பெற்றோலிய வளத் துறை ஊழியர்கள் இன்று சேவையில்

எரிபொருளின் விலையை விரைவாக அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வலுசக்தி அமைச்சிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது ஒரு மாதத்திற்கொருமுறை அல்லது மூன்று மாதத்திற்கொருமுறை தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலையினை மறுசீரமைக்க வேண்டும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எரிபொருள் விலையை அதிகரிக்க எவ்வித தீர்மானமும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை என வலுசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளமை அவதானத்திற்குரியது.

உலக சந்தையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதற்கமைய தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என வலுசக்தி அமைச்சிடம் கடந்த 7 ஆம் திகதி வலியுறுத்தினோம்.

எரிபொருள் விலையேற்றம் குறித்து வலுசக்தி அமைச்சு இதுவரையில் சாதகமான தீர்மானத்தை பெற்றுக் கொடுக்கவில்லை.

உலக சந்தையின் விலையேற்றத்திற்மைய எரிபொருள் விலை அதிகரிக்கப்படாத காரணத்தினால் ஒரு லீற்றர் டீசல் விற்பனையின் போது 50 ரூபா நட்டத்தையும், ஒரு லீற்றர் பெற்றோல் விற்பனையின் போது 17 ரூபா நட்டத்தையும் எதிர்க்கொள்கிறோம்.

எரிபொருள் விலை அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் கூட்டுத்தாபனம் மேலும் பாரிய நிதிநெருக்கடியினை எதிர்க்கொள்ள நேரிடும்.

பொது காரணிகளை கருத்திற்கொண்டு எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு வலுசக்தி அமைச்சிடம் இரண்டாவது முறையும் வலியுறுத்தியுள்ளோம்.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது ஒரு மாதத்திற்கொருமுறை அல்லது மூன்று மாதத்திற்கொருமுறை தேசிய மட்டத்தில் எரிபொருள் விலை மறுசீரமைக்கப்பட வேண்டும். பொருத்தமான எரிபொருள் விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம்.

எமது கோரிக்கை குறித்து வலுசக்தி அமைச்சு சாதகமான தீர்மானத்தை முன்னெடுக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

காதலர் தினத்தில் தற்கொலை கொண்ட சோடி

Next Post

இலங்கையில் சர்ச்சையில் சிக்கிய பிரபுவின் மகன் | திரைமறைவில் நடந்தது என்ன?

Next Post
இலங்கையில் சர்ச்சையில் சிக்கிய பிரபுவின் மகன் | திரைமறைவில் நடந்தது என்ன?

இலங்கையில் சர்ச்சையில் சிக்கிய பிரபுவின் மகன் | திரைமறைவில் நடந்தது என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures