Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

எமது கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் | தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்

August 6, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
திங்கள் முதல் பணிப்பகிஷ்கரிப்பு |  தனியார் பஸ் உரிமையாளர்கள் எச்சரிக்கை

பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான தீர்மானத்தை போக்குவரத்து அமைச்சு மீளப்பெற வேண்டும்.தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் விநியோகிக்க வலுசக்தி அமைச்சு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டோம் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் குறிப்பிட்டனர்.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கையினை நிறைவேற்ற அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும்.ஒரு சில தனியார் பேருந்துகள் நேற்றைய தினம் போக்குவரத்து சேவையில் ஈடுப்பட்டதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் விநியோகம் வரையறுக்கப்பட்ட நிலையில் தேவையான எரிபொருளை தொடர்ந்து விநியோகிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எரிபொருள் விலை குறைப்பை தொடர்ந்து பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டது.

பேரூந்து கட்டணம் குறைக்கப்பட்டமை பொது பயணிகளுக்கு சாதகமாக அமைந்தாலும்,மறுபுறம் அது தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.முன்வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து அவதானம் செலுத்தாத காரணத்தினால் நேற்றைய தினம் ஒருசில சங்கத்தினர் சேவையில் ஈடுப்படுத்தவில்லை.

துனியார் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்திற்கு சொந்தமாக சுமார் 1500 பேரூந்துகள் நேற்றைய தினம் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டன.எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சுமார் 10,000 பேருந்துகள் சேவையில் ஈடுப்படுத்த முடியாத நிலையில் உள்ளன.ஆகவே எரிபொருள் பிரச்சினைக்கு வலுசக்தி அமைச்சு சிறந்த தீர்வை முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சு தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் எவ்வித பேச்சுவார்த்தையினையும் முன்னெடுக்கவில்லை.எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில் பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது,ஆகவே கட்டணம் திருத்தம் தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் மீள பெற்றுக்கொள்ள வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தினர் குறிப்பிட்டனர்.

Previous Post

இலங்கைக்கு மற்றொரு பதக்கம் உறுதி | நீளம் பாய்தல் இறுதிப் போட்டியில் சாரங்கி

Next Post

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி, ஜனாதிபதி ரணிலுக்கு எழுதிய கடிதம்

Next Post
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி, ஜனாதிபதி ரணிலுக்கு எழுதிய கடிதம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி, ஜனாதிபதி ரணிலுக்கு எழுதிய கடிதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures