Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

எமது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமானால் சர்வகட்சியில் இணைவது குறித்து அவதானம் | விக்கினேஷ்வரன்

August 9, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எமது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமானால் சர்வகட்சியில் இணைவது குறித்து அவதானம் | விக்கினேஷ்வரன்

அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக வாக்களித்தோம்.

எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவது குறித்து அவதானம் செலுத்தப்படும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஷ்வரன் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்குமிடையிலான சந்திப்பு திங்கட்கிழமை (8) இடம்பெற்றது.

சந்திப்பு நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியல் கைதிகளை விடுவித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தற்போதைய ஜனாதிபதி பிரதமராக பதவி விகித்த போதே முன்வைத்துள்ளோம்.

அவற்றை நிறைவேற்றுவதாக வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமையவே பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பின் போது அவருக்கு ஆதரவாக வாக்களித்தோம்.

எனவே எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவது தொடர்பில அவதானம் செலுத்தப்படும். அத்தோடு எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அவரிடம் மீண்டும் கோருவோம் என்றார்

Previous Post

இலங்கையில் எரிபொருள் இறக்குமதி, விநியோகத்தில் ஈடுபட ஆர்வம் காட்டும் சீனாவின் முன்னணி எரிபொருள் கூட்டுத்தாபனம்

Next Post

ஒரு நிமிடத்தில் ஹெலிக்கொப்டரில் அதிகமுறை ‘புல்-அப்ஸ்’ எடுத்து கின்னஸ் உலக சாதனை

Next Post
ஒரு நிமிடத்தில் ஹெலிக்கொப்டரில் அதிகமுறை ‘புல்-அப்ஸ்’ எடுத்து கின்னஸ் உலக சாதனை

ஒரு நிமிடத்தில் ஹெலிக்கொப்டரில் அதிகமுறை 'புல்-அப்ஸ்' எடுத்து கின்னஸ் உலக சாதனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures