வடமாகாணத்தில், தமிழ் தேசத்திற்கான என்னுடைய 10 மாதகால சேவையில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் போன்றதொரு நேர்மையான அதிகாரியை நான் கண்டிருக்கவில்லைஎன வாடா மாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார் .
போருக்கு பின்னர் நலிவடைந்தும் ஒதுக்கப்பட்டும் இருந்த மக்களுக்கு சேவைபுரிவதற்காகவே தன்னை அர்ப்பணித்த என்.வேதநாயகன் அவர்கள், இலஞ்சம் மற்றும் ஊழல்களை கண்டறிந்து அவற்றிற்கு எதிராக போராடி வந்தவொருவர்.
அவர் எப்போதுமே தன்னை அரசியலுடன் தொடர்புபடுத்திக் கொள்ளாமல் தன்னுடைய மக்கள் பணியினை முன்னெடுத்துச் சென்றவர்.
அவர் ஒரு பலமான பேச்சாளராகவோ அல்லது பலமான விவாதியாகவோ இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதிகாரவர்க்கத்தின் துணையுடன் இடம்பெறும் இலஞ்ச ஊழல்கள் நிரம்பிய ஒரு கட்டமைப்புக்குள் நின்றுகொண்டு, அவற்றை திறமையாகவும் நேர்மையாகவும் கையாண்டு மக்களுக்கு எவ்வாறு சேவைபுரிய வேண்டுமென்பதற்கான முன்னுதாரணமாகவே வேதா திகழ்ந்தார்.
இவ்வாறு மக்களுக்காக தம்மை அர்ப்பணித்து பணிபுரியும் அதிகாரிகள், வித்தியாசமான தளங்களில் தொடர்ந்தும் மக்களுக்கும் நாட்டிற்கும் சேவை புரிவதற்கான வழிவகைகளை மேற்கொள்வதை நாம் கட்டாயம் உறுதிப்படுத்த வேண்டும் என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .

