Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பு: ரொசான் ரணசிங்க

November 28, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரணிலால் இலங்கையில் சிவில் யுத்தம் ஏற்படும் ஆபத்து! பதுங்கு குழியில் மகிந்த | கடுமையான எச்சரிக்கை

தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் (27.11.2023) உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எனது உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இன்றோ, நாளையோ நடுவீதியில் நான் படுகொலை செய்யப்படலாம்.

மாவீரர்களை நினைவேந்த தயார் நிலையில் தாயகம் : கிழக்கில் வலம் வரும் போலி சுவரொட்டிகள் – சதி நடவடிக்கை அம்பலம்

உயிர் அச்சுறுத்தல்

இந்த உயிர் அச்சுறுத்தலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அவரது சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவும் பொறுப்பு சொல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பு: ரொசான் ரணசிங்க | Roshan Ranasinghe To Accuses Ranil

அத்துடன் தாம் அமைச்சுப் பதவி வகிப்பதற்கு தகுதியானவர் எனவும், மக்களின் வாக்குகளினால் தெரிவானவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாம் அரசியலில் எவ்வித ஊழல் மோசடிகளிலும் தாம் ஈடுபட்டதில்லை எனவும், சொந்த வியாபார முயற்சிகள் மூலம் கடின உழைப்பில் முன்னேறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சாகல ரத்நாயக்க எவ்வித தகுதியும் இன்றி அமைச்சு விவகாரங்களில் தலையீடு செய்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி தம்மை பழி வாங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆதரவு

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தாமும் ஒருவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பழையவற்றை மறந்து தற்பொழுது தம்மை பழிவாங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பு: ரொசான் ரணசிங்க | Roshan Ranasinghe To Accuses Ranil

தமது நிறுவனங்கள் மீது சோதனைகள் நடத்தப்படுவதாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் நிறுவனத்தில் பாரிய ஊழல் மோசடிகள் இடம் பெற்று வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் கிரிக்கெட்டில் நிலவிவரும் மோசடிகளை தடுக்க முடியாவிட்டால் அடுத்த ஜனாதிபதி தேர்தலிலேனும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேவேளை, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சாத்தியங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

காருடன் துவிச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் பலி

Next Post

சீன, இந்திய குடிமக்கள் மலேசியாவிற்கு வீசா இன்றி செல்லலாம்

Next Post
சீன, இந்திய குடிமக்கள் மலேசியாவிற்கு வீசா இன்றி செல்லலாம்

சீன, இந்திய குடிமக்கள் மலேசியாவிற்கு வீசா இன்றி செல்லலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures