Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எனது உடல்நலன் குறித்து இதுவரை 6 முறை வதந்தி பரவிவிட்டது-எஸ்.ஜானகி

June 29, 2020
in News, Politics, World
0

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி நலமுடன் இருப்பதாகவும் அவரின் உடல்நிலை குறித்து பரவிவரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அவரின் மகன் முரளி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவின் மிக மூத்த பின்னணி பாடகியாக அறியப்படும் எஸ்.ஜானகி (வயது 82) ஹைதராபாத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேல் ஆங்கிலம், சைனீஸ், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 17 இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் 48,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

தென் இந்தியாவின் நைட்டிங்கேல்’ என புகழப்படும் எஸ்.ஜானகி சினிமா துறையில் 1957ம் ஆண்டில் ‘விதியின் விளையாட்டு’ என்ற தமிழ் படத்தின் மூலம் பின்னணி பாடகியாக தனது கலைப்பயணத்தை தொடங்கினார். வயது மூப்பின் காரணமாக 2018ம் ஆண்டுடன் பாடல்கள் பாடுவதை ஜானகி நிறுத்திக்கொண்டார்.

இந்நிலையில் சமீபத்தில் மைசூருக்கு உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற போது அங்கு கால் இடறி கீழே விழுந்ததில் பாடகி ஜானகிக்கு இடுப்பில் முறிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக அவருக்கு கடந்த மே மாதம் அறுவை சிகிச்சையும் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் பாடகி எஸ்.ஜானகி உடல்நலக் குறைவால் மரணமடைந்து விட்டதாக இன்று காலை முதலே சமூக வலைத்தளங்களில் தகவல்கள் உலா வரத்தொடங்கியது. இதன் காரணமாக அவரின் ரசிகர்கள் அதிச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இது தொடர்பாக எஸ்.ஜானகியின் மகனான முரளி கிருஷ்ணா கூறுகையில், தனது தாயார் உடல்நலத்துடன் இருப்பதாகவும். தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை அறிந்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

எஸ்.பி.பி விளக்கம்:

மேலும் ஜானகி உடல்நலன் குறித்து இசையமைப்பாளர் தீனாவும் விளக்கமளித்துள்ளார். ஜானகியுடன், பாடகர் எஸ்.பி.பி தொடர்பு கொண்டு பேசியதாகவும் அப்போது ஜானகி சிரித்து சந்தோஷமாக பேசியதாகவும், எனது உடல்நலன் குறித்து இதுவரை 6 முறை வதந்தி பரவிவிட்டதாகவும் அவர் எஸ்.பி.பியிடம் பேசியதாக இசையமைப்பாளர் தீனா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Previous Post

யஸ்மின் சூக்காவிடம் 100 கோடி ரூபா நட்ட ஈடு கோரிக்கை

Next Post

சங்கிலியை பறிக்க முயன்ற இளைஞன் மடக்கி பிடிப்பு

Next Post

சங்கிலியை பறிக்க முயன்ற இளைஞன் மடக்கி பிடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures