Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்க தயார் | மகிந்த அறிவிப்பு

May 21, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
போராட்டங்களை முன்னெடுக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாட்டிற்கு கிடைக்கும் டொலர்களை வெகுவாக பாதிக்கும் | மகிந்த

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்குவதற்கு தயார் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அத்துடன், எரிபொருள் பற்றாக்குறையும் ஏற்பட்டது.

இதன் காரணமாக நாடு முழுவதும் நீண்ட நேர மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் சடுதியாக அதிகரித்தது.

எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்க தயார் - மகிந்த அறிவிப்பு

இதன் காரணமாக நாடு முழுவதும் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்ததுடன், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் உடன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுபெற்றது.

மேலும், அரசாங்கத்திற்கு எதிராக ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை என்பன முற்றுகையிடப்பட்டு மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 9ம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது அரச ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.

எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்க தயார் - மகிந்த அறிவிப்பு

இதனையடுத்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகினார். மேலும், இந்த வன்முறையின் போது 10 பேர் வரையில் கொல்லப்பட்டதுடன் 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

அத்துடன், ஏராளமான பேருந்துகளும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளும் தீவைக்கப்பட்டன. இதனையடுத்து நாடு முழுவதும் அவசர கால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், ஊரடங்கு  உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்க தயார் - மகிந்த அறிவிப்பு

தற்போது இந்த வன்முறை சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே, குறித்த வன்முறை சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்குவதற்கு தயார் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Previous Post

இலங்கை வரவுள்ள வெளிநாட்டவர்களுக்கு முக்கிய தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பிரதமர் ரணில்

Next Post

தமிழக அரசு வழங்கிய நிவாரண பொருட்கள் நாளை வந்தடையும்

Next Post
இலங்கைக்கு உதவுவதற்க்கான தீர்மானம் தமிழ்நாடு சட்டபேரவையில் நிறைவேற்றம்!

தமிழக அரசு வழங்கிய நிவாரண பொருட்கள் நாளை வந்தடையும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures