Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

எதிர்பார்ப்புகளை தகர்த்து கார்த்திக் சுப்புராஜுடன் கரம் கோர்த்த சூர்யா

April 2, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
எதற்கும் துணிந்தவன் படத்தின் முக்கிய தகவல்

‘கங்குவா’ எனும் மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் படத்தை தொடர்ந்து சூர்யா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியைப் பெற்ற ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ எனும் திரைப்படத்தை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். விரைவில் வெளியாகவிருக்கும் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான ராம் சரண் நடிக்கும் :கேம் சேஞ்சர்’ எனும் திரைப்படத்திற்கும் கதை எழுதி இருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். தயாரிப்பு- விநியோகம்- இயக்கம்-.. என மூன்று தளங்களிலும் திரைத்துறையில் தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்திருக்கும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க சூர்யா சம்மதித்திருக்கிறார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவிருந்த :வாடிவாசல்’ எனும் திரைப்படத்தின் பணிகள் திட்டமிட்டபடி தொடங்காத காரணத்தினாலும், ‘சூரரைப் போற்று’ படத்தின் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகும் ‘புறநானூறு’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட சூர்யா, அப்படத்தின் பணிகள் திட்டமிட்டபடி நிறைவடையாததாலும்… கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க சூர்யா ஒப்புக்கொண்டிருப்பதாக திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தை வழக்கம்போல் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ‘சூர்யா 44’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் பணிகள் விரைவில் தொடங்கும் என்று அவதானிக்கப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான டைட்டில் லுக் அல்லது ஃபர்ஸ்ட் லுக் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 ஆம் திகதியன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ரசிகரான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிப்பதால்.. இந்த திரைப்படமும் பான் இந்திய அளவிலான திரைப்படமாக இருக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Previous Post

இம்ரான் கான், புஷ்ரா பீபியின் 14 வருட சிறைத்தண்டனை இடைநிறுத்தம்

Next Post

சிறிலங்கா அதிபர் தேர்தலில் ஈழத் தமிழர்கள் என்ன முடிவை எடுப்பது! | தீபச்செல்வன்

Next Post
கோட்டாவை தொடர்புகொண்டார் ரணில்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் ஈழத் தமிழர்கள் என்ன முடிவை எடுப்பது! | தீபச்செல்வன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures